states

50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாதது ஏன்? விசாரிப்பதாக அமைச்சர் பேட்டி

சென்னை, மார்ச் 15- தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை 25 லட்சம் முதல் 27  லட்சம் மாணவர்கள் வரை எழுது கின்றனர்.  ஒவ்வொரு தேர்விலும் வழக்க மாக 3 முதல் 4 விழுக்காடு மாண வர்கள் தேர்வு எழுத வராமல் ‘ஆப் சென்ட்’ (தேர்வு எழுத வரவில்லை)ஆவது வழக்கம். ஆனால், 12 ஆம் வகுப்பு தமிழ் தேர்வை 50 ஆயிரத்து 674 மாணவர்கள் எழுத வரவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. பள்ளி படிப்பின் இறுதி கட்டமான  12 ஆம் வகுப்பு பொது தேர்வில் தாய் மொழியான தமிழ் பாடத்தையே 50,674 மாணவர்கள் எழுதாமல் புறக்கணித்தது கல்வித்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது தேர்வு  பயம், மற்றும் உடல்நிலை சரியின்மை  ஆகியவற்றை முக்கியமான காரணமாக கூறி வருகின்றனர். அது மட்டுமின்றி வைரஸ் காய்ச்சல், கொரோனா போன்றவை நீடிப்பதால் அதனாலும் பரீட்சை எழுத வரவில்லை என்ற காரணங்களை முன்  வைக்கின்றனர். கடந்த ஆண்டு 32  ஆயிரம் மாணவர்கள் முதல் நாளில் தேர்வு எழுத வராத நிலையில், இந்த  ஆண்டு கூடுதலாக 18 ஆயிரம் மாண வர்கள் தேர்வு எழுத வராதது பற்றி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் அரசுப் பள்ளியில் எவ்வளவு பேர் தேர்வு எழுதவில்லை, தனியார் பள்ளிகளில் எவ்வளவு பேர் எழுதவில்லை என்ற பட்டியலை எடுத்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறையில் வட்டாரங்களில் கிடைத்த தகவல் வருமாறு:

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்த ஆண்டு 83 ஆயிரத்து 819  பேர் தேர்ச்சி பெறவில்லை. இதில்,   11 துணைத் தேர்வு எழுதி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர் கள் தேர்ச்சி பெற்று தற்போது 12 ஆம் வகுப்பு படித்து வந்தனர். மீதமுள்ள  மாணவர்கள் 11 ஆம் வகுப்பு  பொதுத்தேர்வில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாத நிலையில் 12 ஆம்  வகுப்பில் எப்படி தேர்ச்சி பெற முடியும்  என்று பயந்து படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டனர். ஆனால் இவர்கள் பள்ளிக் கூடங்களில் தொடர்ந்து படிப்பது  போல் கணக்கு காட்டி மாணவர்களின் எண்ணிக்கையை குறையாமல் காண்பித்துள்ளனர்.  இந்த மாணவர்களை இடை நிற்றலாக கணக்கு காட்டினால், பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாட்டில் பல்வேறு கேள்விகள் எழும். இதை மறைக்கவே இடை நின்ற மாணவர்களையும் 12 ஆம்  வகுப்பு படிப்பது போல் தொடர்ந்து  கணக்கு காட்டி அரசின் தேர்வுத்  துறைக்கு ‘பட்டியல்’ அனுப்பியுள்ள னர். அதன்படி அனைத்து மாணவர்க ளுக்கும் ‘ஹால் டிக்கெட்’ (தேர்வு நுழைவு சீட்டு) பெற்றுள்ளனர். மாணவர்கள் வகுப்புக்கே வரவில்லை என்பதை மறைத்து ஹால் டிக்கெட் வழங்கப்பட்டதாகவும் ஆனால் தேர்வுக்கு வரவில்லை என்று கூறி ‘ஆப்சென்ட்’பட்டியலில் சேர்த்துள்ளதாகவும் காரணம் தெரியவந்துள்ளது.

மேலும் சில மாணவர்கள் தேர்வு பயம் காரணமாக தேர்வு எழுத வரவில்லை என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் அதிக அளவில் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை  என்ற தகவலும் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு 11 ஆம்வகுப்பில் தோல்வி அடைந்த பல மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் பள்ளிகளில் பங்கேற்கவில்லை. பள்ளிக்கே சரி யாக வராத இவர்கள் தேர்வு  எழுத  வரவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை என்கிறார்கள் அதிகாரிகள்.  2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காரணமாக பள்ளிகள் முழுமையாக இயங்காத சூழலில் ‘ஆல் பாஸ்’ (முழு தேர்ச்சி) நடை முறை கொண்டு வரப்பட்டது. கொரோனா சரியான நிலையில் கடந்த ஆண்டு முழு பாடத்திட்டங்களோடு தேர்வு நடத்தப்படவில்லை. பாதி படத்திட்டத்தோடுதான் 10 ஆம் வகுப்பு  மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வை சந்தித்தனர். ஆனால் இப்போது அப்படியில்லை. முழு பாடத் திட்டத்தோடு தேர்வு  நடைபெறுவதால் பல மாணவர்க ளுக்கு தேர்வு பயம் ஏற்பட்டிருக்க லாம் என்றும் கருத்து தெரிவித்தனர். ஒட்டு மொத்தத்தில் கொரோனா தாக்கம் மாணவர்கள் மத்தியில் இன்னும் நீடிக்கிறது. அவர்களை மனதளவில் தயார் செய்திருக்க வேண்டும். பள்ளிக்கு சரிவர வராத மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளித்திருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் குறை கூறி வரு கின்றனர்.  இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறுகையில்,“ மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கு காரணங்கள் என்ன என்பது பற்றி விசாரித்து வருவதாகவும் ஓரிரு நாளில் விளக்கமாக தெரியப்படுத்தப் படும் என்றும்” என்று தெரிவித் திருக்கிறார்.