சென்னை, மார்ச் 5- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ப.மாணிக்கம் நூற்றாண்டு விழா மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் சென்னையில் சனிக்கிழமை (மார்ச் 4 ) நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பால கிருஷ்ணன் பேசியதாவது: தோழர் ப.மாணிக்கம் சிறு வயதி லேயே தன்னை சுதந்திரப் போராட் டத்தில் இணைத்துக் கொண்டவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சுதந்திரப் போராட்டத் தில் ஈடுபட்ட போது, அதை நிர்வாகம் டுக்க முயன்றது. ஆனால் 3 மாத காலம் தொடர்ந்து போராடினார்கள். பல்கலைக்கழக நிர்வாகம் 14 மாண வர்களை நீக்கியது. தோழர் பாலதண்டா யுதம், ப.மாணிக்கம் ஆகியோரும் வெளியே அனுப்பப்பட்டனர். அவர்கள் பிற்காலத்தில் சிறந்த கம்யூனிஸ்ட்டாக மாறி மக்கள் பணியாற்றினார்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் விடுதலைப் போராட்டத்தின் ஊன்றுகோலாக மட்டுமல்லாமல் உமாநாத், பாலசுப்பிரமணியம் போன்ற பல்வேறு தலைசிறந்த கம்யூனிஸ்ட்டு களை உருவாக்கிய இடம். தோழர் சங்கரய்யா, ஆர்.நல்லக்கண்ணு போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றியவர் தோழர் மாணிக்கம். 14 ஆண்டுக்காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக பணி யாற்றியவர். மாணிக்கம் சிறையிலிருந்த போது, இறந்துபோன அவருடைய தந்தையின் முகத்தைக் கூட பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தங்கையின் திரு மணத்திற்கு வாழ்த்தக் கூட செல்ல முடி யாமல் அவரது தலைமறைவு வாழ்க்கை இருந்தது. இந்தியாவில் தியாகத்தின் வடுக்களைப் பெற்ற வர்கள் கம்யூனிஸ்ட்டுகள்தான். விடு தலைப்போராட்டத்தில் கம்யூனி ஸ்ட்டுகள் சிந்திய ரத்தம் அளப்பரியது. இந்த நாட்டு மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட வர்கள் கம்யூனிஸ்டுகள்.
கம்யூனிஸ்டுகள் தங்கள் வசந்தத் தைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை, மக்களின் வாழ்வுக்காகக் கவலைப் பட்டவர்கள். நாட்டிற்கு ஏற்படும் சவால் களை எதிர்கொண்டு அதற்குச் சமாதி கட்டிய பெருமை கம்யூனிஸ்ட்டு களுக்கு உண்டு. நாட்டில் உள்ள ஒரு கடைக்கோடி மனிதனுக்குத் துன்பம் என்றால் அதற்குக் குரல் கொடுப்பது செங்கொடி இயக்கம்தான். வகுப்புவாத மதவெறி சக்திகளின் மிகப்பெரிய சவால் இன்று நம்முன் எழுந்துள்ளது. மதவெறி சக்திகள் நாட் டையே பிளவுபடுத்தி நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட்டு கள், கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள் தங்களுடைய எதிரி என்று கூறிய தோடு, அவர்களை அழிக்கவும் நினைக் கிறார்கள். நாட்டை இந்து ராஷ்டி ரமாக மாற்றும் முயற்சியில் ஈடு பட்டு வருகிறார்கள். ஒற்றை ஆட்சி என்ற பாசிச ஆட்சியைக் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். கடந்த 8 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்க ளின் சொர்க்க பூமியாக இந்தியாவை மாற்றி விட்டார்கள். வரலாறு காணாத வகையில் உழைப்பாளி மக்கள் சுரண்ட ப்படுகிறார்கள். இந்த நாட்டை பாதுகாக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு நம்முன் உள்ளது. எனவே மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றி ணைத்து பாசிச சக்திகளை முறி யடிப்போம், வெற்றி பெறுவோம். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.