288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் நவம்பர் 20 அன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அக்., 22 அன்று வேட்புமனுத்தாக்கல் துவங்கியது. அரசியல் கட்சிகள் வேட்பாளர் அறி விப்பு மற்றும் வேட்பு மனுத்தாக்கல் பணி யில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிராவில் தொகுதி பங்கீடு முடிவடைந்து, வேட்பாளர் அறிவிக்கப்பட்டப் பின் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணிக் குள் மோதல் துவங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (அக்., 20) பாஜக 99 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை வெளியிட்டது. பாஜக அறி வித்துள்ள 4 தொகுதிகள் (கல்யாண் ஈஸ்ட், தானே, நவி மும்பை மற்றும் முர்பாத்) தாங்கள் வலுவாக உள்ள தொகுதிகள் என சிவசேனா (ஷிண்டே) தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்து போஸ்டர் யுத்தத்தை தொடங்கி யுள்ளனர். மேலும் இந்த 4 தொகுதி களில் நாங்கள் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் மட்டுமின்றி, தேர்தல் சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடு படமாட்டோம் என சிவசேனா (ஷிண்டே) கட்சியினர் அறிவித்துள்ளனர். கோபத்தில் ஷிண்டே சிவசேனா தலைவரும், முதல்வரு மான ஏக்நாத் ஷிண்டேவின் கோட்டை எனக் கூறிக்கொள்ளும் தானே சட்ட மன்ற தொகுதியில் சஞ்சய் கேல்கரை பாஜக வேட்பாளராக அறிவித்ததற்கு ஏக்நாத் ஷிண்டேவும் கடும் கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக - சிவசேனா (ஷிண்டே) கட்சிக ளிடையேயான மோதல் தேர்தலுக்குள் மேலும் தீவிரமடையலாம் என அரசி யல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள் ளனர்.