புதுதில்லி,ஏப்.7- ரயில்களில் வைபை வசதி வழங்குவது நிறுத்தப்படுவதாக வும், 5ஜி சேவை அறிமுகப் படுத்தப்பட்ட பின்னர்தான், ரயில்களுக்குள் இணைய சேவை கிடைக்கும் என்று ஒன்றிய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை யில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் அளித்த பதிலில், தற் போது 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்லும் ரயில்களில் 4ஜி வாயிலான தொலைத்தொடர்பு சேவையில் இடையூறு ஏற்படுகிறது. எனவே, 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர்தான் ரயில்களுக்குள் இணைய சேவை கிடைக்கும் என்று தெரிவித்தார்.