states

தீக்கதிர் விரைவு செய்திகள்

இன்றும் வாக்காளர் சிறப்பு முகாம்

சென்னை, நவ. 16 - இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, அடுத்தாண்டு ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் கடந்த அக்டோபர் 29 அன்று தொடங்கி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதேபோல், நவம்பர் 23, 24 ஆகிய தேதிகளிலும் தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கான படிவங்கள் வாக்காளர்க ளுக்கு வழங்கப்பட்டு, அதன் விவரங்கள் பெறப்பட்டு அவை வாக்காளர்களின் விவரங்க ளுடன் இணைக்கப்படுகின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் மற்றும் 17 வயது நிரம்பி 18 வயது பூர்த்தி அடையும் நிலையில் உள்ளவர்களுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம்-7 ஐ பூர்த்தி செய்தும், சட்டமன்ற தொகு திக்கு உள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பி டத்தில் உள்ளவர்களும், மேலும் வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தங்கள் செய்ய படிவம்-8 ஐ பூர்த்தி செய்தும் அதற்கான ஆவண ஆதார நகல் வழங்கப்பட்டு வருகிறது.

தலைமறைவாக இருந்த  நடிகை கஸ்தூரி கைது

சென்னை,நவ.16-  தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய புகாரில் நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டார். சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி  தெலுங்கு, பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்கள் குறித்து இழிவாக பேசியதாக பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.  நடிகை கஸ்தூரி மீது அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் புகார் அளித்தது. முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் நடிகை கஸ்தூரி தலைமறைவாகினார். இதனைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் நடிகை கஸ்தூரியை தேடிவந்தனர். இந்நிலையில் ஐதராபாத்தில் தலைமறைவாக இருந்த கஸ்தூரியை சனிக்கிழமையன்று கைது செய்தனர். 

‘டி.என்.பி.எஸ்.சி. டெலிகிராம் சேனல்’

சென்னை, நவ. 16 - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தமிழக அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் வாயி லாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1, 2, 2ஏ, 4, 5 என பல்வேறு பதவிகளுக்கு போட்டித் தேர்வுகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்த தேர்வு தொடர்பான அறிவிப்புகள், எழுதிய தேர்வுக ளின் முடிவுகள் https://www.tnpsc.gov.in/ என்ற டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. மேலும், டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்திலும் வெளியாகிறது. இதன் மூலம் தேர்வர்கள் பார்த்து அறிந்துகொள்கின்றனர். இந்த நிலையில் தற்போது டெலிகிராம் சேனல் பக்கத்திலும் டி.என்.பி.எஸ்.சி. அதிகா ரப்பூர்வ பக்கத்தை தொடங்கி உள்ளது. இந்த பக்கத்தில் தேர்வர்கள் தங்களை இணைத்துக் கொள்ள https://x.com/TNPSC-Office என்ற எக்ஸ் தளப் பக்கத்தில் சென்று அதில் டெலிகிராம் சேனல் தொடங்கப்பட்டது குறித்து வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கும் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால், டி.என்.பி.எஸ்.சி.யின் அதி காரப்பூர்வ டெலிகிராம் சேனலுக்கு சென்றுவிடும். அதில் தேர்வர்கள் தங்களை இணைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் தேர்வுகள், தேர்வு  முடிவுகள் தொடர்பான விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

இந்துத்துவா அரசியல் பிரச்சார மையமா ஆளுநர் மாளிகை? சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம்

வள்ளுவருக்கு காவி உடை அணிவித்து மத அடையாளமாக முன்னி றுத்தும் வேலையை ஆளுநர் தொடர்ந்து செய்து வருவதாகவும், இந்துத்துவா அரசியலை பிரச்சாரப்படுத்தும் பணியில் ஆளுநர் மாளிகை பிரதான இடமாக இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற மதுரை மக்களவை உறுப்பினருமான சு. வெங்கடேசன் விமர்சித்துள்ளார். திருவள்ளுவரை அவர்கள் சார்ந்த அரசியலுக்கு பயன்படுத்த துடிக்கின்றனர். மதம் சாதி சார்ந்த வெறுப்பு அரசியலுக்கு திருவள்ளுவர் படத்தை பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும், “வந்தே பாரத்துக்கு காவிநிறம் அடிப்பவர்கள் அதை இயக்கும் மின்சாரத்தில் எப்படி கைவைக்க முடியாதோ, அப்படித்தான் வள்ளுவருக்கு காவியடிப்பவர்கள் வள்ளுவத்தில் கைவைக்க முடியாது. மின் ஆற்றலை விட வலிமையானது வெறுப்பு அரசியலுக்கு எதிராக வள்ளுவம் பேசும் அறத்தின் ஆற்றல்” என்று சு. வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.