உலகின் பிரபல டெலி காம் நிறுவனமான வோ டோபோன் வரும் காலங் களில் 11,000 ஊழி யர்களை நீக்கம் செய்வ தாக அறிவித்துள்ளது. இதுபோல உலகின் பிர பல பணபரிமாற்ற சேவை நிறுவனமான பிரிட்ட னின் பின்டெக் யுனிக் கார்ன் (Fintech unicorn) 26% ஊழியர்களை (400-க்கும் மேற்பட்ட) பணிநீக்கம் செய்ய உள்ள தாக அறிவித்துள்ளது.
சர்வதேச திரைப்பட உல கில் மிகவும் செல்வாக்கு மிக்க 40 பெண்கள் பட்டி யலில் ஏக்தா கபூர் மட்டுமே இந்தியா சார்பில் இடம்பெற்றுள் ளார். ஏக்தா கபூர் பாலாஜி டெலிபிலிம்ஸின் இணை நிர்வாக இயக்கு னராக உள்ளார்.
2023 முதல் 2027 வரை யிலான காலம் அதிக வெப்பநிலை உள்ள கால கட்டமாக இருக்கும் என ஐநா சபை கூறியுள்ளது. 98% அளவில் வெப்ப நிலை உயர வாய்ப்புள் ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
டிஆர்டிஓ மற்றும் இந்திய ஆயுதப் படை களின் திட்டங்கள் குறித்த முக்கியமான தக வல்களை வெளிநாடு களின் புலனாய்வு அமைப்புகளுடன் பகிர்ந்து கொண்டதாக கூறப்படும் விவகா ரத்தில், பத்திரிகையாளர் விவேக் ரகுவன்ஷி மற்றும் முன்னாள் கடற் படைத் தளபதி ஆஷிஷ் பதக் ஆகியோரை மத்திய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.
உலகச் செய்திகள்
போரில் பயன்படுத்த உதவும் ஆளில்லா விமானங்களை உக்ரைனுக்கு வழங்கப் போவதாக பிரிட்டன் அறிவித்திருக்கிறது. திடீர் பயணமாக பிரிட்டனுக்கு சென்ற உக்ரைன் ஜனாதிபதி விளாடிமீர் ஜெலன்ஸ்கி, அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனாக்கைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அந்தப் பேச்சுவார்த்தையில் மேலும் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவது பற்றி விவாதித்துள்ளனர். அதனடிப்படையில், ஆளில்லா போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்ப பிரிட்டன் முடிவெடுத்திருக்கிறது.
சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுச் சண்டையால் பத்து லட்சம் மக்கள் இடம் பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியிருக்கிறது. அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவம் ஆகிய இரண்டிற்கும் இடையில் நடைபெறும் சண்டையில், பொது மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஆனால், பொது மக்கள் தங்கள் இடங்களை விட்டு வெளியேறுவது தொடர்கிறது.
தென் அமெரிக்க நாடான ஈக்குவடார் ஜனாதிபதி லஸ்ஸோவைப் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் மீது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. அந்நாட்டு ஜனாதிபதியை மக்கள் நேரடியாகத் தேர்வு செய்கிறார்கள். இருப்பினும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வாக்களித்தால் அவரைப் பதவி நீக்கம் செய்து விட முடியும். மொத்தமுள்ள 137 உறுப்பினர்களில் 92 பேரின் ஆதரவு பதவி நீக்கத் தீர்மானத்திற்குத் தேவைப்படுகிறது.