விசாகப்பட்டினம், அக்.30- விசாகப்பட்டினம் இரும்பு எஃகு ஆலை கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத் தேர்தலில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொழிற்சங்கம் மற்றும் 17 பேர் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிட்டனர். ஐந்து இயக்குநர்களை தேர்வு செய்வ தற்காக நடைபெற்ற இந்தத் தேர்தலில் ஐந்து இடங்களையும் சிஐடியு கைப்பற்றி யது. கடந்த 30 ஆண்டுகளில் ஆறு முறை நடைபெற்ற தேர்தலில் தொடர்ந்து சிஐ டியு வெற்றி பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 397 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் சிக் கன சங்கத்தின் நலன்களைப் பாதுகாப்ப தில் சிஐடியுவின் நடவடிக்கைகளை தொழி லாளர்கள் மீண்டும் அங்கீகரித்துள்ளனர். உருக்கு ஆலை ஊழியர் சங்கத் தலை வர் ஜெ.அயோத்தி ராம், செயலாளர் ஒய்.டி. தாஸ் ஆகியோர் தொழிலாளர்களுக்கு நன்றியையும் புரட்சிகர வாழ்த்துக்களை யும் தெரிவித்துள்ளனர்.