states

கால்நடை மருத்துவக் கல்லூரி சேர்க்கை - 16,794 விண்ணப்பங்கள்

நாமக்கல், ஜூன் 23- தமிழ்நாட்டிலுள்ள 7 கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இதுவரை மாணவர் சேர்க்கைக்கு 16,794 விண்ணப்பங்கள் வந்துள் ளதாக கால்நடை மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் கே.என். செல்வகுமார் தெரிவித்தார். நாமக்கல் கால்நடை மருத்து வக் கல்லூரியில், தீவனப் பகுப்பாய்வு மற்றும் தரக்கட்டுப் பாட்டு ஆய்வகத்தின் வெள்ளி விழா கல்லூரி அரங்கில் நடை பெற்றது. இதில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் கே.என். செல்வகுமார் பங்கேற்று, கல்லூரி வளாகத்தில் வெள்ளி விழா தூண் ஒன்றையும், மூன்று நாள்கள் நடைபெறும் கண்காட்சியையும் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் ஏழு கால்நடை மருத்துவக் கல்லூரிகள், மூன்று கால்நடை உணவுத்துறை சார்ந்த இதர மருத்துவக் கல்லூரி கள் செயல்படுகின்றன. நிகழாண் டுக்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் கடந்த 12 ஆம்  தேதி தொடங்கியது. வரும் 30 ஆம்  தேதி வரை இதற்கு விண்ணப்பிக் கலாம். கடந்த 10 நாட்களில் இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பு, கால்நடை உணவுத்துறை சார்ந்த படிப்புக்கு மொத்தமாக 16,794 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். நிகழாண்டில் புதிய மருத்துவ படிப்புகள், புதிய கல்லூரிகள் தொடங்கப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.