சென்னை,ஜூன் 14- அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது முதன்மை நீதிபதி அல்லி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது.இதில் செந்தில் பாலாஜி தரப்பு மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று அமலாக்கத்துறை வாதிட்டது.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
திமுக வழக்கறிஞர் பேட்டி
இந்த வழக்கு குறித்து திமுக வழக்கறிஞர் சர வணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமலாக்கத் துறையை பொறுத்தவரை தவறு செய்துவிட்டோம் என தற்போது கருதுகின்றனர் என்று தெரிவித்தார்.