சென்னை, ஆக. 24- வேளாங்கண்ணி மாதா திருவிழாவை முன்னிட்டு இயக்கப் படும் சிறப்பு பேருந்துகள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி யுள்ளது. வேளாங்கண்ணியில் அமைந் துள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திரு விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதை முன்னிட்டு சிறப்பு ரயில் கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன. சென்னை தாம்பரம் - வேளாங் கண்ணி - தாம்பரம் இடையே சிறப்பு கட்டணத்துடன் கூடிய சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
அதன்படி தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ஆகஸ்ட 28ஆம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட உள்ள சிறப்பு ரயில் (06003) மறுநாள் காலை 4.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்ற டையும். மறு மார்க்கத்தில் 29ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு வேளாங் கண்ணியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06004) மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்நிலையில் அரசு போக்கு வரத்துக் கழகம் சிறப்பு பேருந்து கள் குறித்த அறிவிப்பை வெளியிட் டுள்ளது. ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூர், கும்பகோணம், பூண்டி மாதா கோவில், ஒரியூர், சிதம்பரம், புதுச் சேரி, மயிலாடுதுறை, பட்டுக் கோட்டை, திருவாரூர், நாகப்பட்டி னம், நாகூர் காரைக்கால் ஆகிய முக்கிய ஊர்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல் அந்த ஊர்களில் இருந்து வரும் பக்தர்கள் திரும்பிச் செல்ல வேளாங்கண்ணியிலிருந்து ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை 24 மணி நேரமும் சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் சார்பில் இயக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அனைத்து ஊர்களின் பேருந்து நிலையங் களிலும், வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திலும் பயணிகள் வசதிக்காக சேவை மையங்கள் இரவு, பகலாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை மையங்களில் சிறப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப் பட்டு பணிபுரிய உள்ளனர். எனவே இந்த சிறப்பு பேருந்து சேவையை பொதுமக்கள் பயன் படுத்தி கொள்ள வேண்டும் என்று போக்குவரத்துக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.