திருச்சி, ஆக.19- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங் கத்தின் திருச்சி மாவட்டக் குழு சார்பில் வள்ளலார் - 200, வைக்கம் -100 கலை இலக்கிய திருவிழா ஆக. 19 சனிக்கிழமையன்று நடைபெற்றது. ரயில்வே ஜங்சன் அருகில் உள்ள செயி ண்ட் ஜேம்ஸ் பள்ளி திறந்த வெளி கலையரங்கத்தில் நிகழ்ச்சியை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார். இவ்விழாவில் ஆ.ராசா எம்.பி., சு.வெங்கடேசன் எம்.பி., ஆதவன் தீட்சண்யா, கவிஞர் நந்தலாலா, கரு. ஆறுமுகத்தமிழன், திரை இயக்குநர்கள் தமிழ், கவுதம் ராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். திரைப்பட கலைஞர்கள் செந்தில் கணேஷ், இராஜ லெட்சுமி, மக்களிசை பாடல்கள், புதுகை பூபாளம் பிரகதீஸ்வரன்- செந்தில் நை யாண்டி தர்பார், திருச்சி ட்விலைட் டான்ஸ் ஸ்டூடியோ குழுவினரின் நடனம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நூல்கள் வெளியீடு
திருச்சியில் நடைபெற்ற கலை இலக்கியத் திரு விழாவில் கவிஞர் தமிழ்ஒளி எழுதிய ‘பாடு பாப்பா’ நூலை ஆதவன் தீட்சண்யா வெளியிட வழக்கறிஞர் வி.ரங்கராஜன், சிவ. வெங்க டேசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பேராசிரியர் அருணன் எழுதிய ‘பொதுசிவில் சட்டமா? பிராமணிய சிவில் சட்டமா?’ என்ற நூலை அருட்தந்தை டி. யூஜின் அடிகளார் வெளியிட அலிஃப் டீ ஸ்டால் உரிமை யாளர் ஏ. இமாம் அலி பெற்றுக்கொண்டார். நீதிபதிகள் கே.சந்துரு, டி.அரிபரந்தாமன், கே.கண்ணன் ஆகியோர் எழுதிய ‘பொது’ சிவில் சட்டம் தேவையற்ற ஆணி என்ற நூலை அருட்தந்தை டி.யூஜின் அடிகளார் வெளி யிட டாக்டர் கோவிந்தராஜ் பெற்றுக்கொண்டார்.