சென்னை, மார்ச் 20- வரும் ஆண்டுகளில் ஒன்றிய அரசின் மானி யங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைக்காது என்று நிதித்துறை செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:- வரும் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இந்த ஆண்டுடன் 9.62 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. மொத்த மதிப்பானது ரூ.3,65,321 கோடியாக இருக் கிறது. வருவாயைப் பொறுத்தவரையில் 10 விழுக்காடு உயரும் என்று எதிர்பார்க்கிறோம். ஒன்றிய அரசின் மானியம் குறையும் ஒன்றிய அரசிடம் இருந்து முக்கிய சில இனங்களில் இருந்து கூடுதலாகக் கிடைக்க வேண்டியுள்ளது. ரூ. 4,500 ஜி.எஸ்.டி., இழப்பீட்டுத் தொகை வர வேண்டி யுள்ளது. உணவுத் துறையில் ரூ.4 ஆயிரம் கோடி வர வேண்டியிருக்கிறது. ஜிஎஸ்டி இழப்பு ஒன்றிய அர சிடமிருந்து ரூ.20 ஆயிரம் கோடி வந்து கொண்டி ருந்தது. அதுவும் 30.6.2022 ஜூன் மாதத்துடன் நின்று விட்டது.
இந்த ஆண்டிற்கு மட்டுமே 15 ஆயிரம் கோடிக்கு வருவாய் குறைந்துள்ளது. இது வரும் ஆண்டில் ரூ.20,000 கோடியாக வருவாய் குறையும். கடன்கள் வாங்குவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.85 ஆயிரம் கோடி வரை வாங்க நிர்ணயிக்கப்பட்டாலும், இந்த நிதியாண்டு ரூ.75 ஆயிரம் கோடி வாங்க உள்ளோம். இதுவரையில் ரூ.72 ஆயிரம் கோடி வாங்கியுள்ளோம். இந்த மார்ச் இறுதிக்கு ள்ளாக ரூ.3 ஆயிரம் கோடி கடன் வாங்குவோம். 15வது நிதிக் குழு நிர்ணயித்துள்ள அளவை விட குறை வாகவே கடன் அளவு உள்ளது. அரசு மதுபானங்கள் மூலமாக, நிகழாண்டில் ரூ.45 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் கிடைத்துள்ளது. கடந்தாண்டு ரூ.36 ஆயிரம் கோடி கிடைத்தது. வரும் நிதியாண்டில், ரூ.50 ஆயிரம் கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த ரூ.50 ஆயிரம் கோடியில், கலால் வரிகள் மூலமாக, ரூ.12 ஆயிரம் கோடியும், மதிப்புக் கூட்டு வரி ரூ.38 ஆயிரம் கோடியும் கிடைக்கும். செலவுகள் எதையும் குறைக்கவில்லை. அனைத்து வளர்ச்சித் திட்டங்களுக்கும் கூடுதலாகவே நிதி அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.