சென்னை,நவ.26- நுகர்வோரின் மின்இணைப்பு டன் ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, மின்நுகர்வோர் பலரும் மின்வாரிய இணைய தளத்துக்கு சென்று, தங்கள் மின்இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்கும் முயற்சி யில் ஈடுபட்டனர். இதனால், மின்வாரிய இணையதளத்தின் சர்வர் முடங்கியது. இதன் காரண மாக ஆதார் எண்ணை இணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அத்துடன், மின்கட்டணத்தையும் கட்ட முடியாததால், பலரும் சிரமத்துக்கு ஆளாகினர். இதுதொடர்பாக நுகர்வோர் தரப்பில் இருந்து ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து, நவ.24 முதல் 30 ஆம் தேதிக் குள் மின்கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் மின்கட்டணம் செலுத்த 2 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி மின்வாரி யம் அறிவித்தது. எனினும், ஏராளமானோர் தங்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இணையதளம் மூல மாகவும், மின்வாரிய அலுவலக கவுன்ட்டர்களிலும் குவிந்தனர்.
இதனால், மின்வாரியத்தின் இணையதள சேவை முடங்கி யது. மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஆன்லை னில் கடந்த 4 நாட்களாக முயன்றும், இணைக்க முடிய வில்லை. நேரில் சென்று விண் ணப்பிக்கலாம் என மின்வாரிய அலுவலகத்துக்கு வந்தால், இணையதள சர்வர் டவுன் ஆகி விட்டது என்று கூறி, இரண்டு நாட்கள் கழித்து வருமாறு திருப்பி அனுப்பி அலைக்கழிக் கின்றனர். தவிர, அவசர அவசரமாக ஆதார் எண்ணை இணைப்பதால் நுகர்வோருக்கு பல்வேறு சந்தே கம் எழுகிறது. ஆதார் எண்ணை இணைத்தால் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் வரை யிலான மானியம் ரத்தாகுமோ என்று மக்கள் அஞ்சுகின்றனர். எனவே, இதற்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை அவகாசம் வழங்க வேண்டும்’’ என்றனர். இந்த நிலையில், கோவை யில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, “மின்துறையில் சீர்திருத்தம் செய்ய ஆதார் இணைப்பு அவசி யம்”என்றார். கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களின் மின்கட்டணங் களை விட இங்கு கட்டணம் குறைவு. நிலைக்கட்டணம்,
பீக் ஹவர் போன்றவற்றை ரத்து செய்ய வேண்டும் என்பது ஏற்பு டையதல்ல என்றும் மின்கட்ட ணம் செலுத்த ஆதார் எண் இணைப்பு குறித்து அதிமுக, பாஜகவினர் அவதூறு செய்திகளை பரப்பி வருகின்ற னர். ஆதார் எண் இல்லை என்றாலும் இப்போது கட்டணம் செலுத்தலாம். ஆனால், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஆனாலும் மக்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலை நிலவி யதை அடுத்து, மின் கட்டண மையங்களில் கட்டணம் செலுத்த ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பை மட்டும் தமிழ்நாடு மின்சார வாரி யம் திரும்பப் பெற்றிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது வும் ஓர் அரைகுறை நடவடிக்கை தான். தமிழ்நாட்டில் பெரும்பா லான மின் நுகர்வோர்கள் இணையதளம் மூலம் மின்சார கட்டணத்தை செலுத்துகின்ற இந்தக் காலகட்டத் தில், இணையதளத்தின்மூலம் மின் கட்டணம் செலுத்துபவர்க ளுக்கு எந்த ஒரு நிவாரணமும் அளிக்காதது மின் நுகர்வோர் கள் மத்தியில் பெரும் அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது.