states

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம்

சென்னை, மே 13- தமிழ்நாட்டில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யபட்டுள்ளனர்.  இது தொடர்பாக தமிழ்நாடு அரசு  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  நிதித் துறை கூடுதல் தலைமைச்  செயலாளராக இருந்த முருகா னந்தம், முதலமைச்சரின் செயலா ளராக நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சரின் செயலாளராக இது வரை இருந்த உதயசந்திரன்,  நிதித்துறை முதன்மைச் செய லாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சித் துறை முதன் மைச் செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ் உள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறை கூடுதல் தலைமைச் செயலாள ராக இருந்த பணீந்திர ரெட்டி போக்குவரத்துத் துறை செயலா ளராக மாற்றப்பட்டுள்ளார். போக்குவரத்துத் துறை செயலா ளராக இருந்த கோபால் தமிழக விஜிலென்ஸ் ஆணையராக நியமிக் கப்பட்டுள்ளார். இதேபோல சென்னை மாநகராட்சி ஆணை யராக இருந்த ககன்தீப் சிங் பேடி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளராகவும், இப்பொறுப்பை வகித்து வந்த செந்தில் குமார் ஊரக வளர்ச்சித் துறை செய லாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள னர். பொதுப்பணித் துறைச் செயலர் க.மணிவாசன் சுற்றுலாத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். சுற்றுலாத் துறை செயலாளராக இருந்த சந்திரமோகன் பொதுப் பணித் துறை செயலாளர் ஆகி யுள்ளார். பொதுத் துறை செயலாள ராக இருந்த ஜெகன்னாதன் உணவுத் துறை செயலாளராகவும், பள்ளிக் கல்வித் துறை ஆணையராக இருந்த நந்தகுமார், மனிதவள மேம்பாட்டுத் துறை செயலாளராகவும் நிய மிக்கப்பட்டுள்ளனர். உணவுத் துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.