states

தஞ்சாவூர்: மதுபான பாரில் மது வாங்கிக் குடித்த இருவர் பலி

தஞ்சாவூர், மே 21- தஞ்சாவூர் நகர் கீழவாசல் பகுதி யில் மதுபான பாரில் மது வாங்கிக்  குடித்த இரண்டு பேர்  உயிரிழந்தனர். தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை திறப்பதற்கு முன்பே கடையின் அருகே இருந்த  மதுபான பாரில் சட்டவிரோதமாக மது  விற்பனை நடைபெற்றுள்ளது. இங்கு  மது வாங்கிக் குடித்த தஞ்சாவூர் கீழ வாசல் வடைவெட்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குப்புசாமி (60)  சம்பவ இடத்திலேயே பலியானார். காவாரிகாரத் தெருவைச் விவேக்  (36) என்ற இளைஞர் ஆபத்தான நிலை யில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு  சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.  மருத்துவமனையில் அனும திக்கப்பட்டுள்ள மேலும் இருவர் நல மாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. கடை திறப்பதற்கு முன்பே இந்த பாரில் எத்தனை பேர் மது வாங்கிக் குடித்தனர் என்ற விபரம் தெரியவில்லை. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 விழுப்புரம் மாவட்டம் மரக்கா ணம் அருகே எக்கியார்குப்பத்தில் மே  13-ஆம் தேதி இரவு விற்கப்பட்ட தொழிற்சாலைகளில் பயன்படுத்தப் படும் மெத்தனால் கலந்த விஷ சாரா யத்தை 70-க்கும் மேற்பட்டோர் வாங்கி  குடித்தனர்.  இவர்களில் 14 பேர் உயிரி ழந்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தி லும் விஷச்சாராயம் அருந்தி சிலர்  உயிரிழந்தனர். விழுப்புரம், செங்கல்  பட்டு மாவட்டத்தில் விஷ சாராயம்  குடித்து இறந்தவர்களின் எண் ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தஞ்சாவூரில் இரு வர் மதுபான பாரில் மது வாங்கிக்  குடித்து உயிரிழந்த சம்பவம் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிபிஎம் கண்டனம் இச்சம்பவம் தொடர்பாக அதிர்ச்சி யும், கண்டனமும் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், 8123 என்ற  எண் கொண்ட டாஸ்மாக் மதுபானக்  கடைக்கு அருகில் உள்ள பாரில் ஞாயி றன்று காலை அனுமதி நேரத்திற்கு முன்பே சட்டவிரோதமாக மதுபானம்  விற்கப்பட்டது தான் இச்சம்வத்திற்கு அடிப்படை காரணம் எனக் குறிப் பிட்டுள்ளார். சட்டவிரோதமாக மது பானம் விற்பதை தடுக்க காவல்துறை தவறியுள்ளது. டாஸ்மாக் நிர்வாக மும் கண்காணிக்க தவறியுள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை  நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு, சட்டவிரோதமாக பார் நடத்துபவர்கள் மீது தகுந்த எடுக்க வேண்டுமென சிஐடியு மாவட்டச் செய லாளர் சி.ஜெயபால் வலியுறுத்தி யுள்ளார்.