நாமக்கல், ஜூன் 12- ராசிபுரம் அருகே சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை அணைப்பாளையம் பிரிவில் உயர்மட்ட பாலம் கட்டும் கட்டு மான பணிகள் நடைபெற்று வரு கிறது. வாகனப் போக்குவரத்து வச திக்காக அப்பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையன்று நள்ளிரவு 12 மணியளவில் அவ்வழியாக திரு நெல்வேலியில் இருந்து ஒசூர் நோக்கிச் சென்ற கார் விபத்தில் சிக்கியது. தகவலறிந்த ராசிபுரம் காவல் நிலைய காவலர் தேவராஜன், புதுச் சத்திரம் காவல் நிலைய காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சந்தி ரசேகர், பழனி, காவலர் மணி கண்டன் ஆகியோர் சம்பவ இடத் திற்கு சென்று விசாரணை மேற் கொண்டிருந்தனர். அப்போது திருநள்ளாரில் இருந்து சேலம் மாவட்டம் இளம் பிள்ளை நோக்கி அதிவேகமாக சென்ற டிராவல்ஸ் வேன் விசா ரணை நடத்திக் கொண்டிருந்த காவலர்கள் மீது மோதி விபத்துக் குள்ளானது. இந்த விபத்தில் ராசி புரம் காவலர் தேவராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த உதவி ஆய் வாளர் சந்திரசேகர், மணிகண்டன் ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப் பட்டனர். எனினும், மருத்துவமனை செல்லும் வழியில் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் உயிரி ழந்தார். மணிகண்டன் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக புதுச்சத்திரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.