- துருக்கியில் கடந்த 2 நாட்களில் 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மத்திய துருக் கியில் செவ்வாயன்று ரிக்டர் அளவில் 3.3 அள வில் மீண்டும் நில நடுக் கம் ஏற்பட்டது. செவ்வா யன்று மட்டும் 3 முறை மித மான அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. (செய்தி : 6)
- தமிழ்நாடு சுகாதார அலு வலர் பணிக்கான காலி பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்காக எழுத்து தேர்வு பிப்ர வரி 13-ஆம் தேதி நடை பெறும் நிலையில், தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட் தேர்வா ணையத்தின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டது.
- புதுக்கோட்டை மாவட் டம் வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவைக் கலந்த விவ காரத்தில் திருச்சி சிபிசிஐடி அலுவல கத்தில், 8 பேரிடம் சிபி சிஐடி போலீசார் விசார ணை நடத்தினர்.
- மும்பை சிஎஸ்எம்ஐ விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக இர்பான் அகமது ஷேக் என்பவர் கைது செய்யப்பட்டார்.
- 2022 ஆம் ஆண்டில் உயர்கல்விக்காக வெளி நாடு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணி க்கை 68% அதிகரித்துள் ளது என்று ஒன்றிய அர சுத் தரவுகள் வெளியாகி யுள்ளன.
- சென்னை சவுகார் பேட்டையில் கொத்தடி மைகளாக வேலை பார்த்த வடமாநில சிறுவர்கள் 24 பேர் மீட்கப்பட்டுள்ள னர்.
- பாலஸ்தீன எல்லையில் இஸ்ரேல் ராணுவம் நடத் திய துப்பாக்கிச்சூட்டில் 17 வயது பாலஸ்தீன சிறு வன் உயிரிழப்பு.
- பேஸ்புக் மற்றும் இன்ஸ் டாகிராம் உள்ளிட்ட தளங்களில் 3.4 கோடி க்கும் மேற்பட்ட உள்ளடக் கங்கள் நீக்கப்பட்டுள்ள தாக மெட்டா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள் ளது.
- துருக்கியில் நிலநடுக்கத் த்தால் நிலவிய அசாதா ரண சூழலை பயன் படுத்தி ஐஎஸ்ஐஸ் பயங் கரவாதிகள் சிறையில் இருந்து தப்பியோடிய தாக தகவல் வெளியாகி யுள்ளது.
- விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதுக் கோட்டை கிராமத்தில் குடிநீர் மேல்நிலை தொட்டியில், நாய் சடலம் கிடந்த விவகாரத்தில் இறந்த நாய் சடலத்தை தொட்டியில் போட்ட அய் யனார் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- கும்பல் பலாத்கார வழக் கில் 11 குற்றவாளிகளின் தண்டனையை ரத்து செய்ததை எதிர்த்து பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கு தொடர்பாக அனைத்தும் பட்டியலிடப் பட்டு விரைவில் புதிய பெஞ்ச் அமைக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியுள்ளார்.
- உலகச் செய்திகள்
- முதலீடுகளை பாதுகாப்பதற்கான உடன்பாட்டில் வெனிசுலா வும், கொலம்பியாவும் கையெழுத்திட்டுள்ளன. ஒருங்கிணைந்த உற்பத்தியை முன்னிறுத்துவதற்கான திசையை நோக்கி செல்வதற்கு இது உதவும் என்று வெனிசுலாவின் ஜனாதி பதி நிகோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார். கையெழுத்திடும் நிகழ்வில் பங்கேற்ற அவர், இந்தப் புதிய, அதே நேரத்தில் வலுவான உடன்பாடு வருங்கால லத்தீன் அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தக ஒன்றியத்தை உருவாக்க உதவும் என்று குறிப்பிட்டார்.
- ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்குப் படகு மூலம் செல்ல முயன்றவர்களில் 8 பேர் உயிரிழந்தனர். கடுமையான குளிர் வீசுவதால், அதைத் தாங்க முடியாமல் அவர்கள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். 46 பேர் அந்தப் படகில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். எஞ்சியவர்களைப் பத்திரமாகக் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்ய வேண்டும் என்று இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
- ஏமனில் நடைபெற்று வரும் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையில் அந்நாட்டின் கடற்கரைகள் சுமூக நிலைக்குத் திரும்பும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. 2018-ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் அந்தக் கடற்கரைகளில் வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் கண்ணிவெடிகளை ராணுவம் அப்புறப்படுத்தியுள்ளது. மக்கள் கடற்கரைகளில் நடமாடத் தொடங்கியுள்ளனர். தங்கள் வாழ்க்கையில் அமைதி மீளத் தொடங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.