போபால், ஜன. 11 - பாஜக ஆட்சி நடக்கும் மத்தியப் பிரதேச மாநிலம் செழிப்பாகவும், பசுமையாகவும் இருப்பது போல காட்டுவதற்கு, காய்ந்த புல்வெளிக்கு பச்சைப் பெயிண்ட் அடித்த சம்பவம் நடந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் 17-ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் (வெளிநாடு வாழ் இந்தியர் தினம்) விழாவை பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று (ஜனவரி 9) துவக்கி வைத்தார். வெளி நாட்டில் வாழும் இந்தியர்களின் செயல் களை போற்றும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இந்த 3 நாள் விழாவில் வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கு பல்வேறு விருது களும் வழங்கப்பட்டன. 70 வெவ்வேறு நாடுகளில் வாழும் 3,500 வெளிநாடு வாழ் இந்தியர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், சிறப்பு விருந்தி னர்களாக தென் அமெரிக்காவின் கயானா அதிபர் முகமது இர்பான் அலி, சுரினாம் அதி பர் சந்திரிகா பர்சாத் சந்தோகி ஆகியோர் பங்கேற்றனர். சட்டப்பூர்வமான மற்றும் பாதுகாப்பான குடியேற்றத்தின் முக்கி யத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ‘சுர க்ஷித் ஜாயென், பிரஷிக்ஷித் ஜாயென்’ என்ற தலைப்பில் நினைவு அஞ்சல் தலை யும் வெளியிடப்பட்டது. மாநாட்டின் ஒருபகுதியாக, ‘இந்திய சுதந்திரப் போராட்டத்தில் புலம்பெயர்ந் தோர் பங்களிப்பு’ என்ற தலைப்பில், 10,000 சதுர அடியில் பரந்து விரிந்த தொழில்நுட்பக் கண்காட்சி, இடத்தின் மையப்பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது.
நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டனர். இதனிடையே, மாநாட்டையொட்டி வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகளவில் வரவுள்ளதால், இந்தூரை அழகுபடுத்த அங்குள்ள மாநகராட்சி முடிவுசெய்துள்ளது. இந்தூர் நகரம் வறட்சியாக, பார்க்கவே வெறுமையாக இருந்த நிலையில், அதனை எப்படி அழகுபடுத்துவது என்று யோசித்த மாநகராட்சி நிர்வாகம், அதன் இறுதியில், காய்ந்த புல்வெளிகளுக்கு எல்லாம் பச்சை பெயிண்ட்டை அடித்துள்ளது. இதுதொடர் பான புகைப்படங் கள், வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளி யாகி கடுமையான கேலிக்கும் கிண்ட லுக்கும் ஆளாகி வருகிறது. “கற்பனைக்கு எட்டாத, நம்ப முடியாத படங்கள்... பிரதமரின் இந்தூர் வருகைக்கு முன், இந்தூரை பசுமையாக்க பாஜக அரசு புல்லுக்கு பச்சை வண்ணம் தீட்டியது. வாவ் சிவராஜ் வா!!” என்று அம்மாநில பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை, இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி. ஸ்ரீனிவாஸ் கிண்டலடித்துள்ளார். இதற்கு, நாட்டில் நல்ல பணிகள் நடக் கும்போதெல்லாம், காங்கிரஸ் அதில் மகிழ்ச்சியடைவதில்லை என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலூஜா பதிலளித்துள்ளார். “பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை நடத்துவதற்கான பெரிய வாய்ப்பைப் பெற்றுள்ள இந்தூர், மிகக் குறு கிய காலத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது” என்றும் உண்மையை மறைக்க முடியா மல், பெயிண்ட் அடித்ததை ஒப்புக் கொண் டுள்ளார்.