சென்னை, அக். 28 - அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் 1,279 பேருக்கு, வருங்கால வைப்பு நிதி, பணிக் கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப்பலன் களுக்காக ரூ. 372 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (போக்கு வரத்து துறை)வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:- தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த ஏப்ரல் 2022 முதல் நவம்பர் 2022 வரை பணி புரிந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் இறந்த பணியாளர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 414 பய னாளிகளுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்ப டைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ. 1031.31 கோடி வழங்க கடந்த ஆண்டு மார்ச் 29 அன்று உத்தரவிட்டார். அதன்படி, மொத்தம் 3 ஆயிரத்து 414 தொழிலாளர்களின் பல்வேறு பணப்பலன்களுக்காக ரூ. 1031.31 கோடி வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தொழி லாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட தமிழ்நாடு முத லமைச்சர், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கடும் நிதி நெருக்க டிக்கு இடையிலும், கருணை உள்ளத்தோடு, கடந்த டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் என மேலும் 1,279 பயனாளிகளுக்கும், வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப்பலன்களுக்காக ரூ. 372.06 கோடி நிதியை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார் என்ற மகிழ்ச்சி யான செய்தியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.