சென்னை,ஜூன் 22- இந்து சமய அறநிலையத் துறை கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை மீன்வளத் துறை மற்றும் போக்குவரத்துத் துறைக்கு மாற்றிய உத்தரவுகளை ரத்து செய்த தனி நீதிபதியின் தீர்ப்பு சரியானதுதான் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சக்தி முத்தம்மன் கோயிலுக்குச் சொந்தமான 2.03 ஏக்கர் நிலம் இந்து சமய அறநிலையத் துறை அனுமதி இல்லாமல் 1963 ஆம் ஆண்டு மீன்வளத் துறைக்கு மாற்றபட்டு, அதில் சிறு பகுதியில் ஐஸ் உற்பத்தி நிலையம் மற்றும் மீன்களை பாதுகாப்பதற்கான கட்டடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. அதேபோல, சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 1.15 ஏக்கர் நிலம் கடந்த 2018 ஆம் ஆண்டு அறநிலையத் துறை அனுமதி இல்லாமல், போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டு, வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் இந்த உத்தரவு களை எதிர்த்து கோயில் நிர்வாகங் களின் சார்பிலும், பக்தர்கள் என்ற பெயரில் சிலரும் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்த னர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், அறநிலை யத் துறை கோயில்களின் நிலங்களை கோயில் அல்லாத பிற பயன்பாடுக ளுக்கு மாற்றக் கூடாது என கூறி, அரசின் உத்தரவுகளை ரத்து செய்து கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கோயில்களுக்கு சொந்தமான நிலம் அதன் பயன்பாடுகளுக்கு தவிர மற்றவைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவில் தவறு இல்லை. எனவே, அற நிலையத்துறை அனுமதி இல்லாமல் நிலத்தை மாற்றிய உத்தரவு ரத்து செய்யப்பட்டது சரிதான் என்று கூறி அரசின் மேல்முறையீட்டு வழக்குகளை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.