தஞ்சாவூர், ஜூலை 31- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்படும் தமிழ் சார்ந்த ஆய்வுகள் அனைத் தும் பன்னாட்டளவிலான தரம், புதிய நோக்கு, காலத்திற்கேற்ற பார்வை ஆகியவற்றைக் கொண்டு நிகழ்த்து வதற்கான முயற்சிகள் எடுக்கப் பட்டு வருவதாக, தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனை வர் வி.திருவள்ளுவன் தெரிவித்தார். பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறையில் வாரந் தோறும் வியாழவட்டம் என்னும் ஆய்வுக் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. அப்போது கடந்த ஓராண் டில் சிறந்த ஆய்வுத் தாள்களைச் சமர்ப்பித்த முனைவர் பட்ட ஆய்வா ளர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆய்வு மாணவர்களிடையே துணைவேந்தர் முனைவர் வி.திரு வள்ளுவன் உரையாற்றுகையில், “தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வியாழ வட்டம் போன்று ஆய்வரங்கங்கள் நிகழ்ந்து வருவது மிகுந்த மகிழ்ச்சி யளிக்கிறது. சங்க இலக்கியத்தில் நைட்ரஜன் நிலைநிறுத்தக் கூறுகள், சீனா முதல் தகடூர் வரை கரும்பின் பயணம், இலங்கையில் தமிழ் கல் வெட்டுகள், கேரள நாட்டார் வழக் காற்றியல் ஆகிய பல்வேறு தலைப்பு களில் ஆய்வுக் கட்டுரைகளை வாசித் திருப்பது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழாய்வுகள் புதிய திசையில் நகர்வதைக் கண்டு மகிழ்ச்சியடை கிறேன். எதிர்காலத்தில் அறிவியல் நோக்கிலும், நவீனப் போக்கு களுக்கு ஏற்பவும் தமிழியல் ஆய்வு கள் வெளிவர தமிழ்ப் பல்கலைக் கழகம் மூலம் முயற்சிகள் ஏற்க னவே தொடங்கப்பட்டுவிட்டன” என்றார்.