தஞ்சை கோவில்களை பராமரிக்க ரூ. 3 கோடி
சென்னை,பிப்.4- தஞ்சை அரண்மனை தேவஸ் தானத்தில் 88 ஒருங்கிணைந்த கோவில்களின் நிர்வாகம் பரம்பரை அறங்காவலர், உதவி ஆணையர், பொருளாளர் மற்றும் மேலாளரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவில்கள் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கோவில்களில் பெரும் பாலும் குறைந்த வருவாய் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. முதன்மை யாக வருவாய் வரப்பெறும் பிரக தீஸ்வரர் கோவில் மற்றும் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில்களின் வருவாயை கொண்டே இதர கோவில் களின் நிர்வாகம் நிதி பற்றாக்குறை யுடன் தற்போது மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது. இந்நிதி பற்றாக்குறையை போக்கிடும் வகையில் அரசு மானியமாக ஆண்டு தோறும் 3 கோடி ரூபாய் வழங்கப்படு கிறது. அதன்படி நிதி உதவி வழங்கப்பட்டது. தலைமை செயலகத்தில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலா ளர் வெ.இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியத்திற்கு ரூ. 5 கோடி நிதி
சென்னை,பிப்.4- பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தி தொழிலில் ஈடுபடும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலா ளர்கள் நல வாரியத்தின் மூலமாக கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய்வூதி யம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங் களை தமிழ்நாடு அரசு வழங்கி வருகின்றது. அத்தொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் ரூ.5 கோடி பங்களிப்பு நிதியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்.
தனியார் நிகழ்வு கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் மரணம்
வாணியம்பாடி, பிப்.4- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு இலவச புடவைகள் வழங்குவதாக தனியார் நிறுவனம் அறிவித்தது. இதையடுத்து 1000-க்கு மேற்பட்ட பெண்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி பல பெண்கள் மயக்கமடைந்தனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் கூட்ட நெரி சலில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பெண்க ளில், 4 பேர் சிகிச்சை பலனின்றி மரண மடைந்தனர். மேலும் ,12 பேர் ஆபத் தான நிலையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்தச் சம்பவம் குறித்து வரு வாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரசு மருத்துவ மனையில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா விசா ரணை மேற்கொண்டு வருகிறார்.