இன்போசிஸ் ஊழியரிடம், மும்பை போலீஸ், தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) ஆகிய பெயர்களில் நாடகமாடி ரூ.3.70 கோடி பணம் பறித்த விவகாரம் குறித்து பெங்க ளூரு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் “கவுன் பனேகா குரோர்பதி” (உங்களில் யார் கோடீஸ்வரர்) நிகழ்ச்சியில் ஹரியானாவைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஒரு கோடி ரூபாய் பரிசாக வென்றுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் படவுன் மாவட் டத்தில் உள்ள சத்ரா கிராமத்தில் உள்ள பொதுக் குழாயில் தண்ணீர் குடித்ததற்காக தலித் இளைஞர் கமலேஷ் (24) சாதி வெறியர்களால் அடித்துக்கொல்லப்பட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் செம்பூர் பகுதியில் புதனன்று காலை கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 5 வீடுகள் இடிந்து தரைமட்ட மாகின. இதன் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக் கொண்ட நிலையில் தற்போது வரை 11 பேர் படு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய தலைமை செயலாளராக இருக்கும் அருண் குமார் மேத்தா வெள்ளியன்று (நவம்பர் 30) ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், புதிய தலைமை செயலாளராக அடல் டுல்லேவை ஒன்றிய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது.
நாட்டின் முதன்மையான பொதுத்துறை வங்கி யான பாரத ஸ்டேட் வங்கியில் வாடிக்கை யாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவில் காலி யாக உள்ள 8,283 ஜூனியர் அசோசியேட்ஸ் பதவி யிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள் ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து டிசம்பர் 7 ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன.
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநி லத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் 18% பேர் குற்ற வழக்குகளில் தொடர்பு உடைய வர்கள் ஆவர். அதாவது மொத்தமுள்ள 8,054 வேட்பாளர்களில் 1,452 வேட்பாளர்கள் (18%) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 959 (12%) பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன என ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) தக வல் தெரிவித்துள்ளது.