சென்னை,ஏப்.20- ஆளுநர் மீது ஒரு தூசு கூட விழாத வாறு மிகவும் பாதுகாப்பாக காவல் துறை யினரால் அழைத்துச் செல்லப்பட்டார் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்தார். மயிலாடுதுறை - தருமபுரத்தில் ஆளு நரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதனன்று (ஏப்.20) கேள்வி நேரம் முடிந்ததும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச் சர் மு.க.ஸ்டாலின், “நேரமில்லா நேரத்தைப் பயன்படுத்தி அரசிடம் கேள்வியைக் கேட்கும் போது, அதற்குரிய பதிலை கேட்டு, அதிலே உடன்பாடு இல்லை என்றால், வெளிநடப்பு செய்யட்டும்; நான் வேண்டாமென்று சொல்ல வில்லை. அதுதான் மரபு. ஆனால், இதற்கு முன்பு நாம் (அதிமுக,பாஜக) என்னென்ன செய்திருக்கிறோம் என்று சொல்லிவிடு வார்கள் என்பதை புரிந்துகொண்டுதான் வெளியேறிவிட்டார்கள்” என்றார். டிஜிபி மற்றும் ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியின் அறிக்கைகளை சுட்டிக்காட்டி பேசிய முதலமைச்சர்,“தருமபுரம் ஆதீனத் தைச் சந்திக்க திருக்கடையூர் கோயிலில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத் தின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விளக்கியதோடு ஆளுநர் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப் படுவதில் எந்த உண்மையும் இல்லை” என்றும் கூறினார். ஆளுநரின் பாதுகாப்புக்கு மத்திய மண்டலக் காவல் துறைத் தலைவரான ஐஜி தலைமையில் இரண்டு டிஐஜிக்கள், 6 எஸ்பிக்கள், 6 கூடுதல் எஸ்பிக்கள், 21 டிஎஸ்பிக்கள், 54 ஆய்வாளர்கள், 102 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1,120 காவலர்கள் பயன்படுத்தப்பட்டு உரிய பாதுகாப்புகள் கொடுக்கப்பட்டது என்றும் இந்த நிகழ்வை, ஆளுநரைப் பயன்படுத்தி அரசியல் செய்யலாம் என எதிர்க்கட்சித் தலைவரும், துணைத் தலைவரும் எண்ணுகிறார்கள். அது நடக்கவே நடக்காது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர்,
“முந்தைய அதிமுக ஆட்சியின்போது 1995 ஆம் ஆண்டு திண்டிவனத்தில் ஆளுநர் சென்னா ரெட்டி காரை மறித்தது, ஆபத்தான நிலையில் நடுரோட்டில் நின்றது, அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் தலைமையில் சரமாரி யாக கல் எறிந்தது; முட்டையை வீசியது; தக்காளியை வீசி அவமானப்படுத்தியது, தாக்குதலுக்கு உள்ளான ஆளுநரைத் திரும்பப் பெறவேண்டும் என்று தனித் தீர்மானமே கொண்டு வந்ததையும் சாத்தான் குளம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக் கிச் சூடு சம்பவத்தையும் பட்டியலிட்டார். சென்னை விமான நிலையத்திலிருந்து தாஜ் ஓட்டல் வரைக்கும் விரட்டியடித்ததும், அந்த ஓட்டலில் இருந்து வெளியே வரவே முடியாமல் முற்றுகையிட்டு, கல்வீசித் தாக்குதல் நடத்தியது யாருடைய ஆட்சி? இன்றைக்கு பாஜகவில் இருக்கும் சுப்பிர மணியன்சுவாமியை, சென்னை உயர்நீதி மன்ற வளாகத்திற்குள்ளேயே தாக்குதல் நடத்த முயன்று, அசிங்கப்படுத்தியது யாரு டைய ஆட்சி? பெண் ஐஏஎஸ் அதிகாரி; சந்திர லேகா மீது ஆசிட் வீசிய ஆட்சி, யாருடைய ஆட்சி? என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினார். தங்கள் ஆட்சியில் ஆளுநரை கல், முட்டை, தக்காளி என வீசித் தாக்கியதை எல்லாம் மனதில் வைத்து கொண்டு, நடக்காத ஒன்றை நடந்ததாகக் கற்பனையாக இங்கே கூறி அரசியல் செய்ய வேண்டாம் என்றும் முதலமைச்சர் எச்சரிக்கை செய்தார்.