states

அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்

தஞ்சாவூர், ஏப்.8-  காவிரி டெல்டா மாவட்டங்களில் மூன்று  இடங்களில் நிலக்கரி எடுப்பதற்கான செயல்பாட்டை ரத்து செய்கிறோம் என்ற  அறிவிப்பை, ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வ மாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் கூறியதாவது: தற்போது ஒன்றிய அரசின் நிலக்கரி துறை அமைச்சரின் ட்வீட்டர் பக்கத்தில், டெல்டாவில் மூன்று பகுதியில் நிலக்கரி எடுப்பதை நிறுத்துவது போன்ற அறி விப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறி விப்பில், முழுமையாக திட்டத்தை ரத்து  செய்வதாக கூறப்படவில்லை. எனவே,  ஒன்றிய அரசு, சம்பந்தப்பட்ட நிலக்கரி  துறை அமைச்சகம் மூலமாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் மூன்று இடங்களில் நிலக்  கரி எடுப்பதற்கான செயல்பாட்டை ரத்து  செய்கிறோம் என்ற அறிவிப்பை, அதி காரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். நெல் விளையும் பூமியை பிளந்து, நிலக்  கரி எடுப்பதன் மூலம் டெல்டா மாவட்டங் களை பாலைவனமாக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறினால் ஒட்டுமொத்த நாடே உணவுக்கு கையேந்தும் நிலை ஏற்  படும். எனவே ஒன்றிய அரசு நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிட்டதாக கூறிய தோடு இல்லாமல், அந்த துறை அமைச்ச கத்தின் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப் பினை வெளியிட வேண்டும்” என்றார்.  இந்நிலையில், அடுத்த கட்ட நட வடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, ஏப்.9 ஞாயிற்றுக்கிழமை அன்று, தஞ்சை யில் காவிரிப் படுகைப் பாதுகாப்பு கூட்டி யக்கத்தின் சார்பில் மாநில அளவிலான  ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அடுத்த கட்ட போராட்ட அறிவிப்பு கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படு கிறது.