காற்றை விலைக்கு வாங்கும் சூழல் வரக்கூடாது: அமைச்சர்
சென்னை,அக்.3- வரும் காலத்தில் காற்றை விலைக்கு வாங்கும் சூழல் வந்துவிடக்கூடாது என்று வனத்துறை அமைச்சர்கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வன உயிரின வாரம் தொடக்க விழா மற்றும் தமிழ்நாடு புலிகள் பாதுகாப்பு மாநாடு சென்னை எழும்பூரில் நடை பெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பங்கேற்று விழாவைத் தொடங்கிவைத்தார். பின்னர் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே நடத்தப் பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். பிறகு விழாவில் உரையாற்றிய அமைச்சர், “வன உயிரினங்களால் மக்க ளுக்கு அச்சுறுத்தல் இருந்தாலும், மக்கள் நலனுக்காகதான் வன உயிரினங்களை அரசு பாதுகாக்கிறது. வன உயிரின பாதுகாப்பின் அவசியம் குறித்து குழந்தைபருவம் முதலே விழிப்புணர்வு ஏற்படுத்ததான் இதுபோன்ற போட்டிகள் மாணவர்களிடையே நடத்தி பரிசுகள் வழங்கப்படுகின்றன”என்றார்.
ஆர். நல்லகண்ணுவுக்கு தொடர் சிகிச்சை
சென்னை,அக்.3- இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (97) காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து பொதுப்பிரிவு மருத்துவர்களும், சிறுநீரகவியல் துறை மருத்துவர்களும் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இதில் நல்லகண்ணு வுக்கு காய்ச்சல் குணமாகி விட்டது. சிறுநீரக தொற்றுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தர சன் கூறுகையில், “நல்லகண்ணுவுக்கு காய்ச்சல் குணமாகிவிட்டது. ஆனாலும் இன்னும் ஒரு நாள் மருத்துவமனையி லிருந்து சிகிச்சை பெறுமாறு மருத்து வர்கள் கேட்டுக்கொண்டனர். அதன் அடிப்படையில் மருத்துவமனையில் உள்ளார் என்று தெரிவித்தார்.
போதையில்லா தமிழகம்: விழிப்புணர்வு மாரத்தான்
சென்னை,அக்.3- தமிழ்நாட்டில் ‘போதையில்லா தமிழகம்’ என்பதை முன்னிறுத்தி அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆவடி காவல் ஆணையரகம் சார்பில், தனியார் அமைப்புடன் இணைந்து இரவு மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆவடி காவல் ஆணையாளர் சந்திப்ராய் ரத்தோர் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியை, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாரா ஷ்டிரா, ஒரிசா, ராஜஸ்தான், உத்தரப்பிர தேசம், அந்தமான் மற்றும் நிக்கோபார் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதியி லிருந்து வந்திருந்த ஆண்கள், பெண்கள் என சுமார் 3,500 வீரர்கள் பங்கேற்றனர். வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நடைபெற்ற இப்போட்டியில் பங்கேற்க வந்த வீரர்களுக்காக, ஆவடி ரயில் நிலையம் மற்றும் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. தொடர்ந்து போட்டியின் மூன்று பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு ஆவடி காவல் ஆணையாளர் சந்திப்ராய் ரத்தோர் பதக்கங்கள் மற்றும் பரிசு களை வழங்கி கவுரவித்தார்.
மறு உத்தரவு வரும் வரை பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை
கொடைக்கானல்,அக்.3- காலாண்டுத் தேர்வு மற்றும் ஆயுதபூஜை தொடர் விடுமுறையால் கொடைக்கான லில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித் துள்ளது. இதனால் கொடைக்கானல் பிரதான சாலைகளாக உள்ள அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், வத்தலகுண்டு பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் வாகனங்கள் செல்ல முடியாமல் பல கி.மீ தூரம் வரை போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா இடங்களுக்கு செல்ல முடியாமல் பெறும் அவதி அடைந்தனர். மேலும் போக்குவரத்து காவலர்கள் போதிய அளவில் இல்லாமல் இருப்பதால் போக்கு வரத்தை சரி செய்ய முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணி கள் தற்போது மன்னவனூர் மற்றும் சூழல் சுற்றுலா மையம் பகுதிகளை அதிகம் விரும்பி அங்கு சென்று வருகின்றனர். இதனால் கொடைக்கானல் நகர் பகுதியை காட்டிலும் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படு கிறது. தற்போது புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ள ஜிப் ரோப்பிங் விளை யாட்டிலும் செல்ல அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் பேத்துப்பாறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(அக்.2) இரவு முதல் குட்டிகளுடன் யானை ஒன்று முகாமிட்டு அதே பகுதியில் சுற்றி வருகிறது. இதனை யடுத்து பேரிஜம் ஏரிக்கு செல்ல இன்று காலை முதல் வனத்துறை தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் பேரிஜம் ஏரிக்கு செல்ல டிக்கெட் எடுத்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
பிரேசில் : முதல் சுற்றில் லூலா முன்னணி அக்.30 அன்று இரண்டாவது சுற்று
பிரேசிலியா, அக்.3- பிரேசிலின் ஜனாதிபதித் தேர்தலில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு யாரு க்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு அக்டோபர் 30 ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. கருத்துக்கணிப்புகள் இடதுசாரி வேட்பா ளர் லூயிஸ் லூலா டி சில்வாவுக்கு சாதகமாக இருந்தாலும், வலதுசாரி வேட்பாளரான தற்போ தைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சானாரோ எதிர்பார்த்ததைவிட அதிக வாக்குகளைப் பெற்றார். அவருக்கு 43.65 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன. முதல் சுற்றிலேயே வெற்றி பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி லூலா 48.36 விழுக்காடு வாக்கு களைப் பெற்று முதலிடத்திற்கு வந்தார். ஆனால், அவரால் 50 விழுக்காடு வாக்கு களைப் பெற முடியவில்லை. கிட்டத்தட்ட 99.74 விழுக்காடு வாக்குகள் எண்ணப்பட்டுவிட்டன. இதனால், இரண்டாவது சுற்றுக்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. இதர வேட்பாளர்களுக்கு விழும் வாக்குகள் பற்றிய தவறான கணிப்பே இந்த எதிர்பாராத தேர்தல் முடி வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. கணிப்பு களில் சொல்லப்பட்ட விழுக்காடு வாக்குகளை லூலா பெற்றுள்ளார். ஆனால், கணித்ததை விடப் பெரும் அளவில் அதிகமாக போல்சானா ரோவுக்குக் கிடைத்திருக்கிறது. முதல் சுற்றுப் பிரச்சாரத்தில் இடம் பெற்ற பொருளாதார மந்தம், கொரோனா பெருந்தொ ற்றைத் தவறாகக் கையாண்டது உள்ளிட்ட பிரச் சனைகள் மீண்டும் இரண்டாவது சுற்றிற்கான பிரச்சாரத்திலும் இடம்பெறப் போகின்றன.