பெரம்பலூர், ஜூலை 13- பெரம்பலூர் மாவட்டம் ஆலத் தூரில் கூட்டு குடிநீர் திட்ட மறுசீர மைப்பு பணிகளுக்கு போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவ சங்கர் புதன்கிழமை அடிக்கல் நாட்டி னார். பின்னர் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழக முதலமைச்சர் பெரம்ப லூர் மாவட்டத்திற்கு எண்ணிலடங்கா திட்டங்களை தொடர்ந்து வழங்கி வரு கிறார். ஆலத்தூர் ஒன்றியம் மற்றும் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள சுமார் 16 ஆயிரம் பேருக்கான குடிநீர் தேவை யினை பூர்த்தி செய்திடும் வகையில் தலா ரூ.1.28 கோடி வீதம் ரூ.2.56 கோடி மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப் பட்டுள்ளது. இந்த குடிநீர் திட்டப் பணி கள் 6 மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சீராக பாதுகாப் பான குடிநீர் வழங்கப்படும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு புதிதாக 2,000 பேருந்து கள் வாங்குவதற்கான நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீதி மன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தினால் இது தாமத மாகியது. தற்போது அதற்கான தீர்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் இதற்கான டெண்டர் கோரப்பட்டு அதில் கலந்து கொள்ளும் நிறுவனங்களை தேர்ந்தெடுத்து புதிய பேருந்துகள் வாங்குவதற்கான நடவடிக்கை துவங்கப்படும். 8 அல்லது 9 மாதங்க ளுக்குள் இந்த நடவடிக்கைகளை முடித்து விரைவாக புதிய பேருந்து களை அறிமுகப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறி வுறுத்தியுள்ளார். அதனடிப்படையில் புதிய பேருந்துகள் வாங்குவதற் கான நடவடிக்கைகள் துவங்கப்பட் டுள்ளன.
தமிழகத்தில் பேருந்துகள் தனியார்மயமாக்கல் என்ற பேச் சுக்கே இடமில்லை. இந்தியாவி லேயே முதன்முதலாக தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் என் பதை நிர்மாணித்தவர் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலை ஞர்தான். தனியார் வசம் இருந்த பேருந்துகளை அரசுடைமையாக்கி நகர்ப்புறத்தில் மட்டும் இயங்கி வந்த பேருந்துகளை கிராமப்புறங்களு ககும் செல்வதற்கான நடவடிக்கை களை எடுத்தவர் அவர். அவரது வழி யிலான ஆட்சியில் பேருந்துகளை தனியார்மயமாக்குவது என்ற நோக் கத்திற்கு இடமில்லை. தொடர்ந்து மாணவர்களுக்கான இலவச பயண திட்டம், பெண்களுக் கான இலவச பயண திட்டம் என இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மிக சிறப்பான முறையில் திட்டங்கள் தொடரும். ஊதிய உயர்வு கோரிக்கை தொடர் பான பேச்சுவார்த்தை மொத்தம் ஐந்து கட்டங்களாக நடைபெற்றுள்ளது. ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டி ருக்கிறது. ஒரு சில கோரிக்கைகள் மட்டும் முதலமைச்சரின் கவனத் திற்கு கொண்டு சென்று தீர்வு காணப் பட வேண்டியுள்ளது. விரைவிலே அதற்கான முடிவு எடுக்கப்படும். தற்போது சென்னையில் அரசு மினி பேருந்துகளை இயக்க புதிய வழித்தடங்களை கண்டறியும் நட வடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. அவற்றில் எவ்வளவு ஓட்டு நர் மற்றும் நடத்துநர் தேவை என்பதை கணக்கெடுத்து, பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித் தார்.