சென்னை, அக். 10 - நூறு நாள் வேலை திட்டத்தில் ஊதியம் வழங்காததை கண்டித்து செவ்வாயன்று (அக். 10) மாநிலம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஒன்றிய அரசு ஊதிய நிலுவை யை உடனடியாக வழங்க வேண்டும். நிதியை பெறுவதற்கான முயற்சிகளை மாநில அரசு எடுக்க வேண்டும். பணி முடித்த 15 நாட்களுக்குள் கூலி வழங்கா விடில் 0.05 விழுக்காடு அபராதத்துடன் கூலி வழங்க வேண்டும் என்று விதி உள்ளது. எனவே, உரிய இழப்பீட்டு தொகையை சேர்த்து கூலியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட முடிவில், ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் குமாரை சந்தி த்து, சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், மாவட்ட நிர்வாகிகள் கிரு ஷ்ணன், எம்.குமார் (தென்சென்னை), எஸ்.மனோன்மணி, மனோகர் (மத்திய சென்னை), ஜெயச்சந்திரன், ராணி (வட சென்னை) ஆகியோர் மனு அளித்து பேசினர்.