states

மனிதகுல மேம்பாட்டில் பின்னடைவு

ஐநா மேம்பாட்டு திட்ட அமைப்பு (யுஎன்டிபி) 30ஆண்டுகளு க்கு முன்னர் உருவாக்கப்பட்டது.உலக நாடுகளில் மக்களின் சராசரி ஆயுட்காலம்,கல்வி அளவு, வாழ்க் கைத் தரம் ஆகியவற்றை இந்த  அமைப்பு ஆய்வு செய்து ஒவ்வொரு  ஆண்டும் மனித குல மேம்பாட்டு குறியீட்டை நிர்ணயிக்கிறது.  2019ஆம் ஆண்டு வரை மனித குல மேம்பாட்டு குறியீடு படிப்படியாக அதிகரித்து வந்தது.இதனால் உலக நாடுகளில் மக்களின் சராசரி ஆயுட் காலம் கல்வி வசதிகள்,வருவாய் அதிகரித்து வந்தன என ஐநா அமைப் பின் ஆய்வில் தெரியவந்தது.  இதற்கிடையில்,2019ஆம் ஆண்டு இறுதியில், கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கி உலக நாடுகளை ஆட்டி வைத்தது.இது வரை 61கோடி மக்களை தொற்று பாதித்துள்ளது. 65.13லட்சம் பேர் பலியாகியுள்ளனர். 

கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020ம் ஆண்டு முழு வதும் பல நாடுகளில் ஊரடங்கு அம லாக்கப்பட்டு வர்த்தகம்,தொழில்கள்,போக்குவரத்து முடங்கின.இதன் காரணமாக மக்களுக்கு வேலை இழப்பு,வருமானம் பாதிப்பு போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட்டன.  இந்நிலையில் ஐநா திட்ட மேம்பாட்டு அமைப்பு (யுஎன்டிபி) சமீ பத்தில் வெளியிட்ட அறிக்கையில், 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் 5ஆண்டுகளில் மனிதகுல மேம் பாட்டு குறியீட்டில் ஏற்பட்ட அதிகரிப்பு அளவுக்கு இணையாக 2020-2021 ஆண்டுகளில் குறியீடு குறைந்துள் ளது.எனவே மனிதகுல மேம்பாட் டில் 5ஆண்டுகள் பின்னடைவு ஏற் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக் கது என்று தெரிவித்துள்ளது.  மக்களின் சராசரி ஆயுட்கா லம்,கல்வி அளவு,வாழ்க்கைத் தரம் ஆகியவையே மனிதகுல மேம் பாட்டுக்கு முக்கியமான 3அளவு கோள்கள் ஆகும்.  கொரோனா தொற்று மற்றும் பொருளாதார தேக்கம் ஆகிய கார ணங்களால்,மனிதகுல மேம்பாட் டில் 5ஆண்டுகள் ஏற்பட்ட மேம் பாட்டை நாம் இழந்துவிட்டோம்.மக்க ளின் சராசரி ஆயுட்காலமும் குறைந்து விட்டது.  தெற்காசிய நாடுகளின் பொ ருளாதார வளர்ச்சி குறித்த அறிக் கையை 3மாதங்களுக்கு ஒருமுறை உலக வங்கி வெளியிட்டு வருகிறது.  கடந்த 2022ல் ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந் தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 6.6 சதவீதம் வளர்ச்சி காணும் என உலக வங்கி தெரிவிக்கி றது.ஆனால் இந்த செப்டம்பர் மாதத்திற்கான அறிக்கையில் அந்த கணிப்பு தவறாகி 6.5சதவீ தமாக குறைந்துள்ளது. சர்வதேச சூழல் காரணமாக இந்தியாவின் பொ ருளாதார வளர்ச்சி கணிப்பு என்பது குறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆரூரான்