திருவனந்தபுரம், ஜுலை 9- கேரள சட்டப் பேரவையில்அதிர்வு தாங்கல்மண்டலம் (பப்பர் சோன்) தொடர் பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை வனத்துறைஅமைச்சர் ஏ.கே. சசீந்திரன் அறிமுகப் படுத்தினார். சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் குறித்து ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தீர்மா னம் வலியுறுத்தியுள்ளது. பேரவை ஒருமன தாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றியது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, ஒரு கிமீ சுற்றளவில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்ட லத்தை வரையறுப்பதில் இருந்து மாநி லத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். மாநி லத்தில் உள்ள வனவிலங்கு சரணா லயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள், பண் ணைகள் மற்றும் பொது நிறுவனங்களை முற்றிலும் தவிர்த்து சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் தீர்மானிக்கப்பட வேண்டும். மாநிலம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளை பரிசீலித்து, இறுதி அறி விப்பை வெளியிட தேவையான நடவடிக்கை களை எடுக்கவும், தேவைப்பட்டால், உரிய சட்டம் இயற்றும் நடவடிக்கைகளை எடுக்க வும் சபை ஒருமனதாக ஒன்றிய அரசை கேட்டுக் கொண்டது.