சென்னை,ஜன.12- தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரி விக்கு தீர்மானத்தின் மீது வியாழ னன்று(ஜன.12) விவாதம் நடை பெற்றது. அப்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பி னர் எம். சின்னதுரை,“ கோவையில் இயங்கி வரும் ஈஷா மையத்திற்கு சுபஸ்ரீ என்பவர் சிறப்பு பயிற்சிக்கு சென்ற வர் வீடு திரும்பவில்லை. இம்மையத் திற்கு அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்”என்றார். ஈஷா யோகா மையம் அரசின் விதி முறைகளுக்கு மாறாக பல்லாயிரக் கணக்கான ஏக்கர் வன நிலங்கள் ஆக்கிர மிப்பு செய்து கட்டிடங்கள் கட்டி யுள்ளது. வன விலங்குகள் வேட்டை யாடுதல், மர்மச் சாவுகள், போதைப் பொருட்கள் பயன்படுத்துதல் என அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, சுபஸ்ரீ மர ணம் குறித்தும், ஈஷா யோகா மையத் தின் மீதான புகார்கள் குறித்தும் விசாரிப்பதற்கு ஒரு உயர்மட்ட விசாரணையை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய முதல மைச்சர் மு.க.ஸ்டாலின்,“ சுபஸ்ரீ காணாமல் போனதை அறிந்து டிச.19 அன்று ஆலந்துரை காவல் நிலை யத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படை யில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளது. காவல் துறையினர் முறையாக விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்கள்”என்றார். துலுக்கன்காடு தோட்டம் அருகில் இருக்கும் கிணற்றில் சுபஸ்ரீ இறந்து கிடந்தது தெரிய வந்திருக்கிறது. அவ ரது உடல் மீட்கப்பட்டு கோவை மருத்து வக் கல்லூரியில் மூன்று மருத்துவர் கள் அடங்கிய குழுவினரால் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டி ருக்கிறது என்றும் சுபஸ்ரீயின் உடல் கணவர் பழனிக்குமாரிடம் ஒப்படைக் கப்பட்டது என்றும் கூறினார். இந்த வழக்கு தொடர்பாக ஈஷா யோகா மையம் மற்றும் செம்மேடு பகுதிகளில், பதிவாகியிருக்கக்கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பதிவு கள், சுபஸ்ரீ மற்றும் அவரது கணவரின் கைப்பேசிகள் உள்ளிட்ட வற்றை கைப்பற்றி தொடர்ந்து விசா ரணை மேற்கொண்டு வருகிறது. விசா ரணையில் நிச்சயமாக உண்மை கண்ட றியப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.