states

23 நொடிகளில் ஜீரோ வேகத்திற்கு மாறிய ரயில்

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்நாட்டின் அதிவேக ரயில்களில்  ஒன்றாகும். இதற்கிடையே கோரமண்டல் ரயிலின் ஜிபிஎஸ் குறித்த  தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது விபத்து நடந்த நேரமான  வெள்ளியன்று மாலை 6.55 மணியளவில் சுமார் 128 கிமீ வேகத்தில் படு வேகமாக சென்று கொண்டிருக்கிறது. 6.55 மணி 28 நொடிகளில்  அதன் வேகம் 128 கிமீ ஆக இருந்துள்ளது. அடுத்த 23 நொடிகளில்  அதன் வேகம் கிடுகிடுவென குறைந்து ஜீரோவுக்கு வந்துவிட்டது. ரயில் ஒட்டுநர் எமர்ஜென்சி பிரேக்கை பயன்படுத்தியுள்ளதையே இது  காட்டுவதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். 128 கிமீ வேகத்தில் சென்று கொண்டிருந்த ரயில் நொடிகளில் ஜீரோவுக்கு வருகிறது என்றால் உள்ளே இருந்த பயணிகள் என்ன மாதிரியான விளைவை உள்ளே அனுபவித்திருப்பார்கள்.