states

சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழ்நாடு அரசு ஒத்துழைக்கும்

சென்னை,ஏப்.26 -      சூடானில் உள்நாட்டுப் போர் காரணமாக நிலவிவரும் சிக்கலான நிலை காரணமாக அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 400 பேர் உட்பட இந்தியர்களை அழைத்து வரும் “ஆபரேஷன் காவேரி” மீட்புப் பணிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டா லின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்  பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், சூடா னில் உள்நாட்டு போர் காரணமாக நிலவிய சிக்கலான நிலை தற்போது முன்னேற்றமடைந்து வரும் நிலையில், இந்திய குடிமக்கள் சூடானில் இருந்து விரைவாக வெளியேறுவதற்கு வசதி யாக இந்திய விமானப்படை விமானம் மற்றும் இந்திய கடற்படை கப்பல்கள் சூடான் அருகே நிறுத்தி வைக்கப்பட் டுள்ளன என்பது ஆறுதலளிப்பதாக கூறி யுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 400 பேர் வரை சூடானில் சிக்கித் தவித்து வருதாகவும் அவர்கள் இந்தியா வுக்குத் திரும்புவதற்கான உதவிகளை எதிர்பார்த்து இருப்பது குறித்து பிரதமரின் கவனத்திற்குத் தாம் கொண்டுவர விரும்புவதாகவும், சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தி யர்களின் முதல் தொகுதி ஐஎன்எஸ் சுமேதா என்ற கப்பலில் இருக்கும் நிலையில் அவர்களின் உறவினர்களிட மிருந்து மாநில அரசுக்கு அவசர அழைப்புகள் வந்துகொண்டிருப்ப தாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள் ளார். மேலும் இதுதொடர்பாக, தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல் களைப் பெறுவதற்கும், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரை வாக வெளியேற்றுவதற்கும் அனைத்து உதவிகளையும் வழங்கவும், வெளி யுறவுத் துறை அமைச்சகம் மற்றும் சூடானில் உள்ள இந்தியத் தூதர கத்துடன் இணைந்து செயல்படவும் தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாக வும் முதல்வர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். “ஆபரேஷன் காவேரி” மீட்புப் பணி யானது, சூடானில் சிக்கித் தவிக்கும் தங்கள் உற்றார் உறவினர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதற்காகக் காத்திருக்கும் அனைத்து இந்தி யர்களின் குடும்பங்களுக்கும் அமைதி யையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும் எனத் தாம் நம்புவதாகக் குறிப்பிட் டுள்ள முதல்வர், சூடானிலிருந்து இந்திய குடிமக்களை வெளியேற்றும் முயற்சிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளதாகவும் அந்த கடி தத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.