கடந்த காலங்களைப் போல் அல்லாமல் இம்முறை வடகிழக்கு மாநிலங்களில் பாஜக படுதோல்வியை சந்திக்கும் என தகவல்கள் உறுதி செய்கின்றன.
வடகிழக்கு மாநில மக்கள் தங்களை நன்றாக புரிந்து கொண்டதால் அங்கு பாஜக மிக வலுவாக உள்ள தாக அடிக்கடி பிரதமர் மோடி பெருமையாக கூறிக்கொள்வார். ஆனால் தற்போது அங்கு பாஜகவின் நிலைமை அதல பாதாளத்தில் உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு காரணங்களால் பாஜக மக்களவைத் தேர்தலில் போட்டியிட கூட தைரியம் இல்லாமல் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவு என ஓட்டம் பிடித்துள்ளது.
மணிப்பூர்
வகுப்புவாத அரசியல் காரணமாக பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலம் கடந்த ஓராண் டாக வன்முறை பூமியாக காட்சி அளித்து வருகிறது. மணிப்பூர் மக்கள் பாஜக மீது கடும் கோபத்தில் உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றால் கண்டிப்பாக விரட்டி அடிப்பார்கள் என்பதை உணர்ந்த மோடி மணிப்பூரில் போட்டியில்லை என தனது கட்சியினர் மூலம் அறிவிப்பை வெளியிட வைத்துள்ளார். மணிப்பூரில் உள்ள 2 தொகுதிகளிலும் போட்டியில்லை என பாஜக நழுவியுள்ளது. சிக்கிம் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சிக்கிம் மாநிலத்திற்கு மட்டுமின்றி கட்சிக்கே நல்லதல்ல என்பதை உணர்ந்த கூட்டணிக் கட்சி யான ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, கூட்டணியை முறித்துக் கொண்டு தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுடன் கூட்டணி அமைத்து போதுமான அளவு தொகுதிகளை வென்ற பாஜக இம்முறை தனித்து போட்டியிட வேண்டும் என்ற இடியாப்ப சிக்கலில் உள்ளது. சிக்கிம் மாநிலத்தில் பாஜக கட்சி இருப்பதாக அக்கட்சிக்கு மட்டுமே தெரியும் சூழலில், வேட்பாளருக்கு ஆள்பிடிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளது பாஜக. மேகாலயா, மிசோரம், நாகாலாந்து வன்முறை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் அண்டை மாநிலங்களான மிசோரம், மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களும் பாஜக மீது கடும் கோபத்தில் உள்ளன. இதனால் பாஜக வேட்பாளர்களை களமிறக்காமல், கூட்டணி கட்சிக்கு ஆதரவு என்று அறிவித்து மக்களவைத் தேர்தலில் போட்டி யிடாமல் ஓட்டம் பிடித்துள்ளது. அசாம், திரிபுரா அருணாச்சலப்பிரதேசம் அசாம், அருணாச்சலப்பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் மட்டுமே பாஜக மக்களவை தேர்தலில் நிற்கிறது. அதுவும் கூட்டணிக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்யும் தைரியத்தால் மட்டுமே அங்கு போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.