பொருளாதார நெருக்கடி யிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வரு வதாக கடந்த வாரம் அறி வித்த இலங்கை அரசு, தற்போது 286 பொருட்க ளின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கு வதாக அறிவித்துள்ளது. எனினும் பொருளாதார நெருக்கடி முழுமையாக சீரடையும் வரையில் மார்ச் 2020-இல் தடை செய்யப்பட்ட வாகன இறக்குமதி உட்பட 928 பொருட்களின் மீதான கட்டுப்பாடுகள் தொட ரும் எனவும் இலங்கை அரசு அறிக்கையில் தக வல் தெரிவித்துள்ளது.
மல்யுத்த தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட் டுக்கு தகுந்த நடவ டிக்கை எடுத்த பின்னரே ஆசிய விளையாட்டுப் போட்டியில் மல்யுத்த வீரர், வீராங்கனை பங் கேற்பார்கள் என மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் துலே பகுதியில் இருந்த திப்பு சுல்தானின் நினை விடம் இடிக்கப்பட்டது. திப்பு சுல்தானின் நினை விடம் சட்டவிரோதமா னது என இந்துத்துவா கும் பல் மாவட்ட ஆட்சியர் மூலமாக இடித்துள்ளனர். ஆனால் துலே எம்எல்ஏ பரூக் அன்வர் (மஜ்லிஸ்) முறைப்படி அனுமதி பெற் றுத்தான் நினைவிடம் கட்டியதாகவும், வெறுப்பு ணர்வால் திப்பு சுல்தா னின் நினைவிடம் இடிக் கப் பட்டுள்ளதாகவும் குற் றம்சாட்டியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக சோமாலியாவில் தீவிர வாதிகளின் தாக்குதல் சாதாரண சம்பவங்கள் போல அரங்கேறி வரும் நிலையில், சனியன்று ஒரு ஹோட்டல் மீது அல்-ஷபாப் இயக்கத்தி னர் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்த நிலை யில்,10 பேர் படுகாயத்து டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள னர்.
ஒடிசாவில் மூன்று ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட வர்களை மீட்ட என்டி ஆர்எப் வீரர்களுக்கு மன அழுத்தக் கோளாறு களைத் தவிர்க்க மனநல நிபுணர்களால் ஆலோ சனை வழங்கப்பட்டு வரு கிறது. குறைந்தது 25 மீட்பு வீரர்கள் கதறும் பயணிகளின் பிளாஷ் படங்கள் மற்றும் இரத்தக் கறை படிந்த உடல்கள் அடிக்கடி கனவில் புலப் படுவதாக மருத்துவ உள வியலாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் அருகே செங்கமேடு பகு தியில் இருசக்கர வாக னத்தில் சென்ற 2 பேர் வெட்டி கொலை செய்யப் பட்டனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் மேலும் 10,000 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என விசிக தலைவரும், எம்பி யுமான தொல்.திருமா வளவன் தமிழ்நாடு அர சிற்கு கோரிக்கை விடுத் துள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி களுடன் தொடர்பு வைத் திருந்ததாக 4 பேரை குஜ ராத் காவல்துறையினர் கைது செய்தனர்.