திருப்பூர், ஜன.25 - திருப்பூரில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவை சீர்குலைப்ப தற்கு ஆர்எஸ்எஸ் கும்பல் முயற்சி செய்தது. இதனை திமுக எம்எல்ஏ., க.செல்வராஜ் தலைமையில் புத்தக கண்காட்சி குழுவினர் அந்த முயற்சியை முறியடித்தனர். திருப்பூர் காங்கேயம் ரோடு வேலன் ஹோட்டல் மைதானத்தில், கடந்த வியா ழனன்று 21 ஆவது புத்தகத் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் வெள்ளிக் கிழமை மாலை நடைபெற்ற கருத்த ரங்கத்தில், நயம் படப் பேசு என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் உரையாற்றினார். பெரியார் குறித்து பேசிய அவர், “1948 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்.சால் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, இந்த நாட்டிற்கு காந்திநாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று பெரியார் கூறியதை” குறிப்பிட்டார். அவர் பேசி முடித்துச் சென்ற நிலையில், கருத்த ரங்கமும் முடிவடைந்த பிறகு, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர், புத்தகக் கண்காட்சி குழுவைச் சேர்ந்த மோகன் கார்த்திக்கிடம் வந்து, கரு.பழனியப்பன் ஆர்எஸ்எஸ்-ஐ குறித்து எப்படி பேசலாம் என்று வாக்கு வாதம் செய்தனர். அப்போது அங்கிருந்த புத்தகக் கண்காட்சி குழுவினர், அவரது பேச்சு குறித்து மாற்றுக் கருத்து இருந்தால் காவல்துறையில் புகார் தெரிவிக்கவும் என்று பதில் அளித்தனர். ஆனால் ஆர்எஸ்எஸ்-காரர்கள், வேண்டு மென்றே தகராறு ஏற்படுத்த முயற்சித்த னர். அப்போது சிறு கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, காவலர்கள் அவர்களை வெளியேற்றினர். ஆனால், புத்தக திருவிழா மைதானத்தை விட்டு வெளியே சென்றவர்கள், இந்து முன்ன ணியினரை அழைத்து புத்தகத் திரு விழா நுழைவாயில் அருகில் கும்ப லைச் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ க.செல்வராஜ், பின்னல் புக் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கே.காமராஜ் உள்ளிட்டோர் புத்தகத் திருவிழா மை தானத்திற்கு விரைந்து வந்தனர். ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி கும்பல் புத்தகத் திருவிழாவை சீர்குலைக் கும் நோக்கத்தோடு வேலன் ஹோட்டல் முன்பாக திரண்டதை அடுத்து, திருப்பூர் மாநகர காவல்துறை துணை ஆணையர் சுஜாதா தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை தடுத்து நிறுத்தினர். புத்தகத் திருவிழாவில் தங்களை தாக்கி விட்டதாக இந்து மதவெறிக் கும்பல் புரளியை கிளப்பிவிட்டு எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பினர். இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ் வரா சுப்ரமணியம் தலைமையில், புத்த கத் திருவிழாவை தடை செய்ய வேண்டும் என்று கூச்சலிட்டனர். இந்த கும்பல் திரண்டதை தொடர்ந்து, புத்தகத் திருவிழாவிற்கு ஆதரவாக சுற்று வட்டாரத்தில் இருக்கக்கூடிய இளைஞர்கள் பெருமளவில் திரண்டனர். புத்தகத் திருவிழாவை சீர்குலைக் கும் எண்ணத்தில், வன்முறை நோக்கத் தோடு கூடியுள்ள கும்பலை கலைக்க வேண்டும். காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என க.செல்வராஜ் எம்எல்ஏ காவல்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். வரலாற்றுத் தகவலை கரு.பழனி யப்பன் பேசியதில், ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு ஆட்சேபணை இருந்தால், அவர்கள் காவல்துறையில் புகார் செய்யட்டும். அதைவிடுத்து அரசு மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும், புத்தகத் திருவிழாவை சீர்கு லைக்க முயற்சி செய்தால் அதை ஏற்க முடியாது. வன்முறை நோக்கத்தோடு திரண்டு இருப்பவர்களை காவல்து றையினர் கலைக்கும் வரை நாங்கள் யாரும் இங்கிருந்து வெளியேறிச் செல்ல மாட்டோம் என்று உறுதிப்படத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறை யினர் கண்காட்சி முகப்பில் கூடி யிருந்தவர்களை அப்புறப்படுத்த முயற்சி மேற்கொண்டனர். இதையடுத்து, சிறிது நேரம் எதிர்ப்பு கோஷம் எழுப்பி விட்டு அந்த கும்பல் கலைந்து சென்றது.