சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து
மதுரை, மார்ச் 17- புதுக்கோட்டை, வேங்கை வயல் கிரா மத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த சம்பவத்தை விசாரிக்க தமிழ் நாடு காவல்துறையிடம் தேவையான மனித வளம் உள்ளது என்று உயர்நீதிமன்றம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை, ஆலங் குடியைச் சேர்ந்த திருமுருகன் உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “புதுக்கோட்டை வேங்கைவயல், இறையூர் பஞ்சாயத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கழிவு நீர் கலக்கப்பட்டது. இந்த தண்ணீரை குடித்த தால் பல குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் ஆய்வு செய்த போது அப்பகுதியில் இரட்டைக் குவளை முறை வழக்கத்தில் இருந்தது தெரியவந்தது. புதுக்கோட்டை, வேங்கை வயல் பகுதி யில் இது போன்ற தீண்டாமைக் கொடுமை கள் பல நடைபெற்று வருகின்றன. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த கழிவு நீர் கலக்கப்பட்ட விவ காரம் குறித்து புதுக்கோட்டை காவல் கண் காணிப்பாளர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடைபெற்றது .பின் இந்த விசா ரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப் பட்டது. ஆனால் இதுவரை இந்த வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது.
எனவே, புதுக்கோட்டை, வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த கழிவு நீர் கலந் தது தொடர்பான வழக்கினை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.” என்று கூறி யிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு வியாழனன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. ஆனால், அதன் மீது எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந் தப்பட்ட அதிகாரிகள் ஓய்வு பெற்று சென்று விடுகின்றனர். எந்த விசாரணை அமைப்பு களுக்கு மாற்றினாலும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப் போவதில்லை. மக்களும் இச் சம்பவங்களை காலப்போக்கில் மறந்து விடு வார்கள். சிபிஐக்கு இந்த வழக்கை மாற்றினால் அவர்கள் தங்களிடம் தேவையான மனித வளம் இல்லை என தெரிவிப்பார்கள்.ஆனால் தமிழ்நாடு காவல்துறையிடம் தேவையான மனித வளம் உள்ளது. கல்வியால் ஏற்படும் விழிப்புணர்வால்தான் இது போன்ற சம்ப வங்களை தடுக்க இயலும் என்று கருத்து தெரிவித்தனர். மேலும் வழக்கின் தற்போதைய நிலை அறிக்கை மற்றும் ஆவணங்களை தமிழ் நாடு அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை மார்ச் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.