மதுரை, அக்.17- பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் பிறழ்சாட்சியாக மாறி பொய் சொன்னாலும் மருத்துவ ஆவணங்கள் பொய் சொல்லாது; அதன் அடிப்ப டையில் வழங்கிய தண்டனை செல்லும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூரில் கடந்த 2018-இல் பள்ளி மாணவி ஒருவர் டியூஷன் சென்று விட்டு தனது ஆண் நண் பருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது சகோதரர்கள் இளவர சன், கார்த்திக் மற்றும் அவர்களின் 4 நண்பர்கள் அங்கு வந்துள்ளனர். அவர்கள் ஆண் நண்பரை மிரட்டி விட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையினர் போக்சோ சட்டப் பிரிவில் வழக்குப் பதிவு செய்து 6 பேரை யும் கைது செய்தனர். வழக்கை விசாரித்த தஞ்சாவூர் நீதிமன்றம் இளவரசன், கார்த்திக் ஆகி யோருக்கு ஆயுள் தண்டனையும், நண்பர்கள் 4 பேரையும் விடுதலை செய்தும் 2019-இல் உத்தரவிட்டது. ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி சகோதரர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர்.
இதனை விசாரித்து நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியும், அவரது ஆண் நண் பரும் பிறழ்சாட்சியாக மாறியுள்ள னர். இருப்பினும் மரபணு பரிசோத னை அறிக்கை மற்றும் தடயவியல் ஆய்வு அறிக்கை அடிப்படையில் மனுதாரர்களுக்கு தண்டனை வழங்கி யுள்ளது. விசாரணையின்போது மாணவி அளித்த வாக்குமூலம் மற்றும் மருத்துவ பரிசோதனையில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது உறுதி செய்யப் பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி பொய் கூறலாம். ஆனால், மருத்துவ அறிக்கை கள் பொய்யாக இருக்காது. போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட மாணவிகள், சாட்சிகள் குற்றவாளி களுக்கும், சமுதாயத்துக்கு பயந்தும் சாட்சி சொல்வதற்கு முன்வருவ தில்லை என்பதற்கு இந்த வழக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். எனவே, இந்த வழக்கில் தஞ்சாவூர் கீழமை நீதி மன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மேல்முறை யீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ள னர்.