சென்னை,டிச.27- நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் தலை வரை மாற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்ச் சமூகத்துக்கு நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும் என நினைக்கும் தனிநபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களை ஒன்று சேர்த்து அரசுப் பள்ளிகளை நோக்கி அவர்களின் கவனத்தைத் திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ என்ற அமைப்பு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டி ருக்கிறது. இந்த அமைப்பின் தலைவராக நிய மிக்கப்பட்டிருக்கும் வேணு. சீனிவா சனை பற்றி ஏராளமான புகார்கள் உள்ளன. இதை தமிழ்நாடு அரசு பரிசீலித்து அந்த பொறுப்புக்கு கல்வியில் அனுபவமும் அக்கறையும் கொண்ட ஒருவரை நியமிப்பது பொருத்தமாக இருக்கும். மாவட்ட அளவில் இதற்கென அமைக்கப்பட்டு இருக்கும் குழுக்களும் மாவட்ட ஆட்சியர் தலைமை யிலான அதிகாரிகள் மட்டுமே கொண்ட குழுவாக உள்ளது.
மாநில அளவிலான குழுக்களிலோ, மாவட்ட அளவிலான குழுக்களிலோ மக்கள் பிரதிநிதிகள் யாரும் இடம்பெறவில்லை. கல்வி யில் ஈடுபாடு கொண்ட மக்கள் பிரதிநிதி களை மாநில, மாவட்ட அளவிலான குழுக்களில் இடம்பெறச் செய்வது மிக மிக அவசியமாகும். ஆதிதிராவிட நலப் பள்ளிகள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தாலும் தன்னார்வத்தின் அடிப்படையில் பள்ளியைத் தத்தெடுக்கவோ நன்கொடை அளிக்கவோ முன்வரு கிறவர்கள் ஆதிதிராவிட நலப் பள்ளி யைத் தேர்வு செய்வார்கள் என்று சொல்ல முடியாது. எனவே, அந்தப் பள்ளிகள் விடு பட்டுப் போவதற்கு வாய்ப்பு இருக்கி றது. அத்தகைய நிலை ஏற்படாமல் அந்தப் பள்ளிகளும் பயன்பெறும் வகை யில் இந்தத் திட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அடுத்து வரும் நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்விக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதோடு நம்ம ஸ்கூல் பவுண்டே ஷன் நிர்வாகக் கட்டமைப்பை ஜனநாயகப் பூர்வமாகத் திருத்தி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.