கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் பேசுகையில், “நாடு இதுவரை இல்லாத வகையில் நெருக்கடியை சந்தித்து கொண்டிருக்கிறது. ஏமர்ஜென்சியின் போது கூட இப்படி இல்லை. அறிவிக்கப்படாத ஏமர்ஜென்சி நடக்கிறது. 8 ஆண்டு முன்பு நடந்ததற்கு, இப்போது தலைமை செயலகத்தில் ஆதாரம் கிடைக்குமா? எடப்பாடி பழனிசாமி, சசிகலா, அன்புமணி என ஒவ்வொருவராக மிரட்டப்படுகிறார்கள். செந்தில் பாலாஜியை யும் மிரட்டியுள்ளார்கள். அதற்கு அடிபணிந்து விட மாட்டோம் என செந்தில் பாலாஜி சொன்னதால் தான் இந்த வெறி, கோபம். கோவையில் திமுக வெல்ல செந்தில் பாலாஜி காரணமாக இருந்ததால், அவரை முடக்க வேண்டுமென கைது செய்துள்ளார் கள். மற்ற மாநிலங்களைப் போல நடத்தி விடலாம் என நினைத்தால் ஏமாந்து போவீர்கள். பாஜக தவிர அனைத்து அர சியல் கட்சிகளும் ஒற்றுமைப்பட்டு 2024ல் இந்த ஆட்சியை தூக்கி ஏறிய வேண்டுமென முடிவு எடுத்துள்ளார்கள். உங்களுக்கு சாவு மணி ஒலித்து விட்டது. அஸ்திவாரம் ஆட்டம் கண்டு விட்டது. எங்கள் கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும். என்றார்.