ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதிய பயங்கர விபத்தில் உயிரி ழந்தவர்களின் எண்ணி க்கை 289 ஆக இருந்த நிலையில், யஷ்வந்த்பூர்- ஹவுரா எக்ஸ்பிரஸின் ஜெனரல் கோச்சில் பய ணித்து பலத்த காயங்களு டன் மீட்கப்பட்ட பீகா ரைச் சேர்ந்த 22 வயது மிக்க நபர் வெள்ளியன்று உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 290 ஆக உயர்ந்தது.
அரிக்கொம்பன் காட்டு யானையை கேரளாவின் மதிகெட்டான்சோலை தேசிய பூங்காவில் விட வேண்டும் என்ற கோரி க்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. களக்காடு - முண்டந் துறை வனப்பகுதியில் விடப்பட்டுள்ள யானை நலமாக உள்ளது என வனத்துறை பதில் அளி த்த நிலையில், வழக்கை முடித்து வைத்து நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகச் செய்திகள்
கொரோனா பரவியிருந்த காலத்தில் இருந்து ஊரடங்கு உத்தரவை மீறி விருந்து மற்றும் கேளிக்கைகளை நடத்தியதாக அப்போதைய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது குற்றச்சாட்டு இருந்தது. அதை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்று அறிக்கை தந்திருக்கிறது. இத்தனைக்கும் அந்தக் குழுவில் பெரும்பாலானோர் அவரது கட்சியைச் சேர்ந்தவர்களாவர்.
ஹைதி நாட்டில் நிலவும் தற்போதைய பிரச்சனைகளுக்கு படைகளை அங்கு அனுப்புவது தீர்வாக இருக்க முடியாது என்று கரீபிய நாடுகளின் கூட்டமைப்பான கரீபிய சமூகத்தின் தலைவரான பிலிப் டேவிஸ் தெரிவித்துள்ளார். அங்கு படைகளை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், கரீபிய நாடுகளின் படைகளை அங்கு அனுப்புவதற்கான நோக்கம் எதுவும் எங்களுக்குத் தற்போது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அணுசக்தியால் இயங்கும் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தென் கொரியாவின் புசான் துறைமுகத்திற்கு வந்திருக்கிறது. இந்தப் பகுதியில் அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து தொடர் போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. முதன்முறையாக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் தென் கொரியத் துறைமுகத்திற்கு வந்திருக்கிறது. இந்த இருநாடுகளின் பயிற்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரண்டு ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை செய்துள்ளது.