சென்னை,ஜூலை 7- 2021-22 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித்துறையின் மானியக் கோரிக்கையின்போது, திருச்சுழி, திருக்கோவிலூர், தாளவாடி, ஒட்டன் சத்திரம், மானூர், தாராபுரம், ஏரியூர், ஆலங்குடி, கூத்தாநல்லூர், சேர்க்காடு ஆகிய இடங்களில் புதியதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதேபோன்று, 2022-23 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை யின்போது, மணப்பாறை, செஞ்சி, தளி, திருமயம், அந்தியூர், அரவக்குறிச்சி, திருக்காட்டுப்பள்ளி, ரெட்டியார்சத்தி ரம், வடலூர், திருபெரும்புதூர் ஆகிய இடங்களில் புதியதாக 10 அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி அனைத்து வசதிகளு டன் கூடிய தற்காலிக கட்டடங்களில் 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழனன்று (ஜூலை 7) தொடங்கி வைத்தார். திருத்தணி - சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 60 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள்,
ஆய்வகக் கட்டடங்கள்; சென்னை வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவ னத்தில் 1 கோடியே 69 லட்சம் செலவில் கட்டப்பட்டு உள்ள கூடுதல் வகுப்பறை கள் மற்றும் ஆய்வகக் கட்டடங்களை யும் முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும் சைதாப்பேட்டை, கல்வியி யல் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் ரூ. 10 கோடியில் கட்டப்பட்டுள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம் மற்றும் சென்னை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்ககத்திற்கான ஒருங்கி ணைந்த நிர்வாகக் கட்டடம். சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் ரூ. 7 கோடியே 48 லட்சத்து 20 ஆயிரத்தில் கட்டப்பட்டுள்ள முதுநிலை மாணவர்க ளுக்கான விடுதிக் கட்டிடங்கள். சென்னை பல்கலைக்கழகத்தில் ரூ. 3 கோடியில் கட்டப்பட்டுள்ள உடற் பயிற்சிக் கூடம் உள்பட பல்வேறு ஊர்களில் மொத்தம் ரூ. 152 கோடியே 1 லட்சத்து 70 ஆயிரம் செலவில் கட்டப்பட்டு உள்ள உயர்கல்வித்துறை கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.