ஈரோடு, பிப். 3- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் போட்டியிடுகிறார். அவர் வெள்ளியன்று தேர்தல் அலுவலரும், மாநகராட்சி மேய ருமான சிவக்குமாரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது, காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வ பெருந்தகை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அ.கணேச மூர்த்தி, அந்தியூர் செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகி யோர் உடனிருந்தனர். அதன் பிறகு செய்தியாளர் களைச் சந்தித்த இளங்கோ வன், “இந்த தேர்தலில் தனி மனிதராக வெற்றியடைவதை விட மதச்சார்பற்ற சக்திகளின் வேட்பாளராக வெற்றி பெற வேண்டும் என நினைக்கின் றேன். ஈரோடு மக்கள் மீது நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகுந்த நம்பிக்கை வைத்திருக் கிறார். ஈரோட்டிற்கு நல்ல பல காரியங்களை செய்ய வேண்டும் என்பதில் முதல்வர் முனைப்போடு இருக்கிறார். நம் மாவட்டத்தின் அமைச் சர் முத்துசாமியோடு இணை ந்து ஈரோடு மாநகரத்திற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ற பட்டியலை மறைந்த என் மகன் திருமகன் ஈவெரா வைத்திருந்தார். அந்த பட்டிய லில் பலவற்றை அவர் நிறை வேற்றி இருக்கிறார். மீதம் உள்ளவைகளை நிறைவேற்று வதற்கு நான் பாடுபடுவேன். குறிப்பாக ஈரோட்டில் இருக்கின்ற போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அமைச்சரோடு திருமகன் பேசியிருக்கின்றார். அதைத் தொடர்ந்து செய்வதற்கும், அதைப் போல் சாயத்தொழில், ஜவுளித்தொழிலுக்குப் பாதகம் ஏற்படாமல், விவசாயிகளுக் கும் பாதகம் ஏற்படாமல் சாயக் கழிவு நீரை எப்படி அப்புறப்படு த்துவது என்ற நிலையில், என்ன செய்வது என்பதை அவசியம் அமைச்சரோடு, அதிகாரிகளோடு ஆலோசித்து முதலமைச்சரின் துணையோடு நிறைவேற்றுவோம்” என்றார்.