சென்னை, நவ. 27 - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் டி. செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே. சாமுவேல் ராஜ் ஆகியோர் அறிக்கை விடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் பொலவக்காளிபாளையம் - இந்திரா நகர் குடியிருப்பில் வசித்து வரும் நவீன் குமார் மற்றும் அவரது நண்பர் கிருபாகரன் ஆகிய இருவரும் 23.11.23 அன்று இருசக்கர வாகனத் தில் வெள்ளாங்குளம் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்ப வந்துகொண்டிருந்தனர். வழியில் ரோட்டின் அருகே இருந்த கருப்பு வாட்டர் டேங்க் அருகில் தாங்கள் சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள் ளனர். அப்போது அங்கு வந்த கண்ணுச் சாமி மற்றும் சசிகுமார் ஆகிய இருவரும் சாதி ஆதிக்க வெறியுடன் உங்களுக்கு எங்கள் பகுதியில் என்னடா வேலை, என அடித்து இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்றுவிட்டனர். எனவே, அவர்கள் இருவரும் வீட்டிற்கு செல்ல இயலாது அதே இடத்திலேயே படுத்து தூங்கி விட்டனர். காலை 6 மணிக்கு இரு சக்கர வாகனத்தை பறித்துச் சென்றவர் கள் அந்த இடத்திற்கு வந்து இன்னும் உங்கள் ஊருக்கு செல்ல வில்லையா எனக் கேட்டுள்ளனர். வண்டியை நீங்கள் பிடுங்கிக் கொண்டு சென்றதால் எங்களால் வீட்டி ற்குச் செல்ல முடியவில்லை எனவே இருசக்கர வாகனத்தை கொடுங்கள் என கேட்டுள்ளனர். இருசக்கர வாகனத்தை எடுத்து வருவதாக கூறிச் சென்ற கண்ணுச் சாமி மற்றும் சசிகுமார் ஊருக்குள் இருந்து மேலும் 18 பேரை அழைத்து வந்து இருவரையும் ஓஸ் பைப், மற்றும் இரும்பு கம்பிகளாலும் மாறி மாறி கடு மையாக தாக்கியுள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் அவர்களை கடுமையாக தாக்கியதில் மயக்க நிலைக்குச் சென்றுள் ளனர். நாவறண்டு தண்ணீர் கேட்ட நிலையில், ‘இந்தாடா சக்கிலிய நாயே’ என்று வாயில் சிறுநீர் கழித்துள்ளனர். சாதி வெறியர்களின் கொலைவெறி தாக்குதலால் படுகாயம் அடைந்த நவீன் குமார் மற்றும் கிருபாகரன் இரு வரும் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிறுவலூர் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவின் கீழ் பொன்னுச் சாமி மற்றும் சசிகுமார் உள்ளிட்ட 20பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 24.11.23 அன்று எப் ஐ ஆர் பதிவு செய்யப் பட்டு 4 நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் இன்று வரை கைது செய்யப்படவில்லை. எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டவுடன் சாதி ஆதிக்க நபர்கள் நவீன்குமார் மற்றும் கிருபாகரன் ஆகிய இருவரும் கோழி திருட வந்ததாக கூறி ஒரு மனுவை காவல்துறையில்கொடுத்துள்ளனர். ‘கோழி திருடியவர்கள்’ மீது வழக்குப் பதிவு செய்யாமல் தங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறி 24/11/2023 அன்று டிஎஸ்பி அலுவலகத்தை சாதி ஆதிக்க சக்திகள் முற்றுகையிட்டு குற்ற வாளிகளை கைது செய்ய விடாமல் காவல்துறைக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளனர். இதனால் காவல் துறை அந்த கொலைவெறி கும்பலை இதுவரை கைது செய்யவில்லை. பட்டியல் சமூக இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரையும் காவ ல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், தாக்குதலுக்கு உள் ளான இளைஞர்கள் மீதே திருட்டு குற்றம்சாட்டி குற்றவாளிகளை கைது செய்ய விடாமல் தடுக்கின்ற நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தாக்கு தலுக்கு உள்ளான இளைஞர்களுக்கு உயர் சிகிச்சை வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சிறுவனூர் காவல்துறை யை வலியுறுத்துகிறது.