பார்டெயில் காட்விட் என்ற பறவை அமெ ரிக்கவின் அலாஸ்காவிலி ருந்து ஆஸ்திரேலியா வின் டாஸ்மேனியாவுக்கு ஓய்வெடுக்காமல் 8,435 மைல்கள் தூரத்தை (13,575 கிமீ) இடைவிடா மல் பறந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அமெரிக்க குளிர்காலத் தில் ஆஸ்திரேலிய கண் டம் நோக்கி இடம் பெய ரும் இந்த பறவை தண் ணீரில் தரையிறங்காது. தண்ணீரில் தெரியாமல் விழுந்தால் பறவை இறந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
50,000 வருடங்களுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்சத்திரம் (சி/ 2022 இ3) வரும் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வர வுள்ளதாக கலிபோர் னியா ஆராய்ச்சியாளர் கள் தகவல் தெரிவித்துள் ளனர்.
நீதிமன்ற உத்தரவை பின் பற்றாத திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவ லர், மாவட்ட கல்வி அலு வலர் ஆகியோருக்கு பிடி வாரண்ட். இருவரையும் ஜனவரி 20-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த திருநெல்வேலி காவல் கண்காணிப்பாள ருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட் டுள்ளது.
பஞ்சா மாநிலத்தின் பசில்கா மாவட்டத்தில் 31 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கைப் பற்றப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை எல்லை பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எப்) கைது செய்தனர்.
மிரட்டி பணம் பறித்த விவகாரத்தில் ஆடியோ வெளியானதை அடுத்து பஞ்சாப் உணவு பதப் படுத்துதல் துறை அமைச் சர் பவுஜா சிங் சராரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அமெரிக்காவின் விர்ஜி னியா மாகாணத்தில் உள்ள ரினக் ஆரம்பப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வரும் மாணவன் (6 வயது) திட்டியதற்காக ஆசிரியையை துப்பாக்கி யால் சுட்டான். தற்போது ஆசிரியர் கவலைக்கிட மாக உள்ள நிலையில், சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் பொங்கல் சீசனில் நடை பெறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல் லூர் ஆகிய ஜல்லிக்கட் டில் பங்குபெறும் மாடு பிடி வீரர்கள் அனைவரும் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற் கான சான்று, ஜல்லிக் கட்டு நடைபெறுவதற்கு முன் 2 நாட்களுக்குள் கொரோனா தொற்று இல்லை என்ப தற்கான சான்றினை வைத்திருந்தால் மட் டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப் படுவர் என மாவட்ட நிர் வாகம் உத்தரவிட்டுள்ளது.
பேஸ்புக், அமேசான், கூகுள், ஜியோ உள்ளிட்ட 6 நிறுவனங்கள் சில்ல றைக் கட்டணங்களுக் கான புதிய குடை நிறுவ னத்தை (NUE) உரு வாக்குவதற்காக தாக்கல் செய்த விண்ணப்பங் களை ரிசர்வ் வங்கி நிரா கரித்துள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் உக்ரைனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30.4 விழுக்காடு சரிவு ஏற்பட்டிருக்கிறது. “விடுதலைக்குப் பிறகு இவ்வளவு பெரிய சேதம் உக்ரைன் பொருளா தாரத்தில் முதன்முறையாக ஏற்பட்டுள்ளது” என்று அந்நாட்டின் பொருளாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் கூறு கின்றன. 2021 ஆம் ஆண்டில் 3.4 விழுக்காடு அதிகரிப்பு இருந்த நிலையில், ரஷ்யாவுடனான பிரச்சனையால் சரிவு ஏற்பட்டி ருக்கிறது.
பெரு நாட்டில் மக்களின் எழுச்சிகரமான போராட்டங்களால் தேசிய நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண் டாட்டங்களுக்குப் பிறகு, மீண்டும் போராட்டம் தொடங்கி இரண்டாவது நாளன்று நெடுஞ்சாலைகளில் 40 இடங்களில் போக்குவரத்து முழுமையாக முடங்கியிருக்கிறது. இந்தப் போராட்டங்கள் பெரும்பாலும் பெருவின் தெற்குப் பகுதியில் நடை பெற்று வருகிறது.
பெரும் மழை பெய்வதற்கான அறிகுறிகள் இருப்பதால், வெள்ள அபாயம் இருக்கும் என்று ஜிம்பாப்வே எதிர்பார்க்கி றது. அந்நாட்டின் மூன்று மாகாணங்களில் 65 மில்லி மீட்டருக் கும் அதிகமான அளவில் மழை பெய்யவிருக்கிறது. நாட்டின் பெரும் பாலான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்று சிவில் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறு கிறது. அடுத்து வரும் 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது என்றும் கூறியுள்ளனர்.