சிஐடியுவில் இணைந்த ஆஷா தொழிலாளர்கள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஹரியானாவில் போராட்டம் நடத்தினர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம் 73 நாட்கள் நீடித்த நிலையில், வியாழனன்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்வதாகவும், கூட்டத்தில் கெளரவ ஊதியம் ரூ.6100 ஆக உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வேலைநிறுத்தத்தை சிஐடியு ஆஷா தொழிற்சங்கம் கைவிடுவதாக அறிவித்துள்ளது.