மதுரை, டிச.14- தமிழ்நாடு முழுவதும் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டங்கள் முறை யாக நடைபெறவில்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தென்காசி மாவட் டம், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன் றியத்துக்கு உட்பட்ட தாருகாபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளுக்கு பொறுப்பாள ராக சுப்புலட்சுமி நியமிக்கப்பட்டுள் ளார். மேலும் தாருகாபுரம் ஊராட்சி உறுப்பினர் முருகலட்சுமி என்பவரும் பணியாற்றி வருகிறார். பொறுப்பாளர்கள் 3 மாதம் (90 நாட்கள்) மட்டுமே பொறுப்பில் பணி செய்ய வேண்டும். ஆனால் மேற்படி அவர் கடந்த 7 மாத காலமாக பணி யில் இருந்து நீக்கப்படாமல் தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர். இதில் முருகலட்சுமி என்பவரின் தகப்ப னார் ராமச்சந்திரன் என்பவர் விவசா யம் செய்து வருகிறார். சுப்புலட்சுமி மற்றும் முருகலட்சுமி ஆகியோர் இணைந்து நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பணியாளர்களைக் கொண்டு ராமச் சந்திரன் என்பவரின் விவசாய நிலத்தில் கரும்புகளுக்கு உரம் வைத்தல், தென்னை மரங்கள் பரா மரிப்பது போன்ற வேலைகளில் ஈடு படுத்தி வருகின்றனர்.இதனால் அர சுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படு கிறது. எனவே, அரசுக்கு இழப்பை ஏற் படுத்திய நபர்கள் மீது துறை ரீதி யான நடவடிக்கை எடுக்கவும், நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முறைப்படுத்த உத்தரவிட வேண் டும்” என்று கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜய குமார் அமர்வு முன்பு புதனன்று நடை பெற்றது.
ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு உத்தரவு
நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டப் பணியாளர்கள் தனியார் நிலத் தில் வேலை செய்த புகைப்படங்கள், நேரம், இடம் ஆகிய ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள் ளது என்று மனுதாரர் தரப்பில் தெரி விக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள் கூறு கையில், நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பணியா ளர்கள் தனியார் நிலத்தில் வேலை செய்ததை மனுதாரர் ஆதாரத்து டன் நிரூபித்துள்ளார். தமிழ்நாடு முழு வதும் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டங்கள் முறையாக நடைபெற வில்லை.இந்த வழக்கில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை செயலரை இணைக்க உத்தரவிட்டு,நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் நடை முறைகள் தொடர்பாகவும் வழக்கு குறித்தும் அறிக்கையை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை செயலர் தாக் கல் செய்ய வேண்டும் என்று உத்தர விட்டனர். மேலும் வழக்கு விசா ரணை ஜனவரி 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.