states

img

தஞ்சாவூர்: சூறாவளி காற்றுடன் மழை; 500 ஏக்கரில் நெல், வாழை பயிர்கள் சேதம்

தஞ்சாவூர், ஜூன் 7-  தஞ்சாவூர் மாவட்டத்தில், திங்கள் கிழமை இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், இரவு பலத்த மழை பெய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மணி நேரங்கள் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.  இதில் மாவட்டத்தில் அதிகபட்ச மாக பூதலூரில் 102.60 மி.மீட்டர் மழை  பதிவானது. இதே போல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் காசவளநாடு புதூர், கண்டிதம்பட்டு, சூரக்கோட்டை, புதுப்பட்டினம், பஞ்சநதிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கோடை சாகு படி செய்யப்பட்டிருந்த நெல் பயிர்கள், அறுவடைக்கு தயாராக உள்ள நிலை யில், பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியது. இதனால் சுமார் 350 ஏக்கர்  பரப்பளவு நெல் பயிர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து கண்டிதம்பட்டு விவ சாயி மோகன் கூறுகையில், “மழை யால் அறுவடைக்கு தயாரான நெற் பயிர்கள் தண்ணீரி்ல் மூழ்கியுள்ள தால், இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வடிகால் வாய்க்கால்கள் 10 ஆண்டு களுக்கு மேலாக இப்பகுதியில் தூர்வாரப் படாத காரணத்தால், மழைநீர் விளை நிலங்களுக்குள் புகுந்தது. இதனால், மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய்  செலவு செய்த நிலையில், வருவாய்  இழப்பையும் சந்திக்க வேண்டி யுள்ளது’’ என்றார்.   வாழை பாதிப்பு இதே போல, திருவையாறு, கடு வெளி, ஆச்சனூர், பனையூர், வைத்திய நாதன் பேட்டை பகுதிகளில், சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கரில், 40 நாட் களில் அறுவடைக்கு தயாராக இருந்த  வாழை மரங்கள் வேருடன் விழுந்து சேதமடைந்தது. திருவையாறு பகுதிகளில், நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை சாகுபடி செய்யும் சூழலில், நெல் பயிர் சேதமடைந்தால் இழப்பீடு வழங்கு வது போல, வாழைக்கும் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.