மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு எழுதிய ‘‘யார் கைகளில் இந்து ஆலயங்கள்’’ என்ற 197 பக்க புத்தகம் தெய்வங்களுக்கும் மானுடத்திற்கும் இருந்த புனித உறவுகளை வர்த்தக உறவாக மாற்றிய மர்மத்தை புரிந்து கொள்ளத் தேவை யான தரவுகளை தருகிறது. சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் உள்ளார்ந்து இருக்கும் நோக்கங்கனை புரிய வைக்கிறது. கோவில் நிர்வாகத்திற்கும் அரசியலுக்கும் உள்ள உறவை வெளிச்சம் போடுகிறது. இன்றைய தமிழக அரசின், இந்துத்வா ஆதிக்க அரசி யல் எதிர்ப்பின் நிறை குறைகளை மதிப்பிட வும் உதவுகிறது.
1. இப்புத்தகத்தின் முதல் 48 பக்கம் மானு டம் மற்றும் மதங்களின் தோற்றம் மன்னர்கள் சுல்தான்கள் முகலாயர்கள் காலத்தில் கோவில்களில் நிகழ்ந்த வரலாற்றை தடயங்க ளின் அடிப்படையில் விவரிக்கிறது குஜராத் சோமநாதர் கோவில் இடிப்பு பற்றிய இந்துத்வா புளுகை வெளிச்சம் போட்டு காட்டு கிறார் ஆசிரியர்.
2. அறநிலையத் துறை அதிகாரியாக இருந்த மார்க்சிஸ்ட் தோழர் ஜெயராமனை பேட்டிகண்டு கோயில்களில் புதைந்து கிடக்கும் மர்மத்தை, சிலை கடத்தல்கனை கோவில் சொத்து அபகரிப்புகனை பட்டியலி டுகிறார்.(பக்கம் 73ல் நடராஜர் சிலை புதையலாக எடுக்கப்பட்டு பிரச்சனையாகி றது என்று குறிப்பு உள்ளது. பக்கம் 74ல் பிள்ளையார் சிலையாக என்று மாறி குறிப்பிடுவதை அடுத்தபதிப்பில் சரி செய்ய வேண்டும்)
3. தோழர் ஜெயராமன் தான் யார் என்பதை எழுதிய பகுதியில், மார்க்சிய நேர்மை எது என்பதை உணர முடிகிறது. கோவில் விழாக் கள், சடங்குகள், சம்பிரதாயங்கள நடைமுறை கள் அனைத்தும் ஆன்மீக தத்துவ அடை யாளங்களாக இருப்பதை அறிகிறோம்.. சுரண் டும் வர்க்கங்களின் சடங்குகளும், சுரண்டப் படும் வர்க்கங்களின் சடங்குகளும் மோதுமி டமாக கோயில்கள் இருந்தன என்பதைப் பார்க்க முடிகிறது.
4. கலைஞர், எம.ஜி.ஆர், ஜெயலலிதா இவர்களது ஆட்சியில் கோயில் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பற்றிய பதிவுகள் இம்மூவரில் யார் பகுத்தறிவோடும் மக்கள் நேயத்தோடும் அணுகினர், யார் மக்களை தங்களது விசுவாசிகளாக நீடிக்க மதச் சடங்குகளை பயன்படுத்தினர் என்பதை சரி யாக மதிப்பீடு செய்ய உதவுகிறது
5. திருப்பனந்தாள் மடாதிபதி, குத்தகை விவசாயிகளை அகற்ற ஒரு கொலை வழக் கில் அந்த விவசாயிகளின் குடும்பத்து மாண வர்களை சேர்க்க காவல்துறை துணை போனதைவிளக்குகிற பகுதி மடத்திற்கும் அதிகார வர்க்கத்திற்குமுள்ள தகாத உறவை விளக்குகிறது. (பக்கம் 61- 62)
6. விரல்விட்டு எண்ணக்கூடிய சில பெரிய கோவில்களை தவிற மற்றவை குல தெய்வங் களாக குறிப்பிட்ட சமூகத்தினர் கொண்டா டும் கோவில்களாகவே. இருப்பது தமிழக கோவில்களின் தனித்துவமாகும். அதற்கு உதாரணமாக பருத்தியப்பர் கோவில் பற்றிய தகவல் உள்ளது. இதில் பருத்தியப்பர் எப்பொழுது பாஸ்கரேஸ்வர் ஆனார் என்ற வரலாற்று தகவல் இல்லை யென்றாலும் 10 நூற்றாண்டிற்கு பிறகு சமஸ் கிருதம் கோவில்கள் வழியாக பரவி சமஸ்கிரு தம் கலந்த பாஷையாக தமிழ் அறிய முடி கிறது. அதோடு மாறியது என்பதை அறிய முடி கிறது. அதோடு எந்த ஆன்மீகவாதிகள் தமிழ்ச் சொற்களை உயர்த்துவதாக கருதி சமஸ்கிருத சொற்களாக தாழ்த்தினார்களோ அதே ஆன்மீக வாதிகள் 20ம் நூற்றாண்டில் தூய தமிழ் இயக்கம் கண்ட விநோத வரலாறு மனதிலே விரிகிறது.
7. இப்புத்தகத்தின் மூலம் இரண்டுவகை யான கோயில்கள் இருப்பதை அறிய முடி கிறது குல தெய்வ கோவில்கள்; மற்றது மடங்க ளின் கட்டுப்பாட்டில் இருக்கும் விவசாய நிலங்களை சொத்தாக கொண்ட கோவில்கள். குல தெய்வ கோவில்களில் கவுரவத்திற் கான போராட்டம் நடக்குமே தவிர சொத்துக் களை அபகரிக்கும் போட்டி இருக்காது. சுயமரியாதையும், கவுரவமும் அங்கு முரண்படும். மற்றதில் சொத்துக்களை அப கரிக்கும் போட்டி பிரச்சனைகளை உரு வாக்கும்.
8. விவசாய நிலங்களை சொத்தாக உடைய கோவில்கள் பெரும்பாலும் மடங்க ளின் மேற்பார்வையில் உள்ளன. அதனால் ஏற்படும் பிரச்சினைகளை வழக்குகளை பற்றிய விவரங்கள் இதில் உள்ளன.
9. பிற மதத்தினரும் வழிபடும் கோவில் கள் உள்ளன. இஸ்லாமியர் ஒருவர் சங்கர நயினார் கோவிலுக்கு யானை வாங்க வழக்குத் தொடுத்து வெற்றிபெற்ற நிகழ்வு; தேர் இழுப்பதில் எல்லாசாதியினரும் பங்கெ டுக்கும் கோவில்களும் அதைமறுக்கும் கோவில்களும் உண்டு என்ற விபரங்கள் இடம் பெற்றுள்ளன.
10. முதலாளித்துவ கட்டத்திற்கு ஒரு சமூ கம் மாறவும் பின்பு நீடிக்கவும் மதம் தேவைப் படுகிறது. ஆனால் மாறுதல் இல்லாமல் மதத்தை பயன்படுத்த இயலாது. மத சீர்திருத்தவாதிகள் போராடினர் என்பதை வரலாறு காட்டுகிறது. புராட்டஸ்டென்ட் மார்க்கம் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் தயாரிப்பு என்பதை ‘‘ஜெர்மனி யில் விவசாய யுத்தம்’’ என்ற ஆய்வு நூலில் எங்கெல்ஸ் விளக்குவார். இந்தியாவில் அப் படி ஒரு புரட்சிகர முதலாளித்துவ வர்க்கம் முதலாளித்துவத்தை உருவாக்கவில்லை. இங்கே பழைய சுரண்டும் வர்க்கங்களே முத லாளித்துவ முறைக்கு தாவினர்.
11. ஒன்றே குலம் ஒருவனே தேவன், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண லாம். என்ற முதலாளித்துவ முழக்கத்தை முன் வைத்து எந்த மத சீர்திருத்தவாதிகளா லும் மக்களை ஈர்க்க இங்கே இயல வில்லை. அந்த பண்பாடு குல தெய்வ வழிபாடு களால் உருவாகவில்லை. அதனால் அதிகாரத்தைக் கொண்டு ராமரை தெய்வமாக்கி இந்துத்வா என்ற புதிய மார்க்கத்தை உருவாக்க பா.ஜ.க முயற்சிப் பதை காண்கிறோம் அதற்கு இஸ்லாமை எதிர்த்தால் போதாது; குல தெய்வங்களையும் இந்துத்வா எதிர்க்க வேண்டும். குல தெய்வ வழிபாடு என்பது சுரண்டப்படும் வர்க்கத்தின் ஆன்மீகம். எனவே இந்துத்வா தடுமாறு கிறது. இதனைப் புரிய இந்த நூல் உத வுகிறது
12. கோயில்கள் என்பது வேதங்கள் குறிப்பிடாத அமைப்பு. பவுத்த, ஜைன மடங்களின் செல்வாக்கை முறியடிக்கவே கோவில்கள் தோன்றின. அந்த மார்க்கங்க ளின். அறவாழ்க்கை போதனையை அகற்றி பக்தியை ஊண் உருக பரப்பின என்ற உண்மையை மட்டுமல்ல; தொல்லியல் அரசி யல். சமூக, பண்பாட்டு வர்க்க உறவுகள் இவைகளை ஆய்வு செய்யும் ஆய்வா ளர்களுக்கு ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய பிரச்சனைகளை இப்புத்தகம் கோடிட்டு காட்டு கிறது. ஆன்மீகப் பார்வையின்செல்வாக்கை மதிப்பிட மார்க்சிஸ்ட்டுகளுக்கு உதவுகிறது.
13. மொத்தத்தில் களப்பணியாற்றும் மார்க்சிஸ்ட்டுகளுக்கு கோவில் அரசியலை அறிய அவசிமான கையேடாகும்.
யார் கைகளில் இந்து ஆலயங்கள்?
(இந்து அறநிலையத்துறை முன்னாள் அதிகாரியின் வரலாற்றுப் பதிவுகள்)
எஸ்.ஜி.ரமேஷ்பாபு
வெளியீடு: பாரதி புத்தகலாயம்
விலை: 170