உத்தரப்பிரதேச மாநிலம் நானௌடா பகுதியில் கோவில் கட்டுமானப் பணி யின் போது முகலாயர் காலத் தைச் சேர்ந்த சுமார் 400 நாணயங்கள் கண்டெடுக் கப்பட்டுள்ளன.
காட்டுப் பறவைகள் மூலம் பிரேசில் நாட்டில் பறவைக் காய்ச்சல் வேகமெடுத்து வரும் நிலையில், அந் நாட்டு அரசு 6 மாத காலம் விலங்கு சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி புறநகர் பகுதியான பரமட்டா நகரத்தின் மேய ராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமீர் பாண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகச் செய்திகள்
சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்துக்கும் நடை பெற்று வரும் மோதல் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது. ஒரு வார காலப் போர் நிறுத்தத்திற்கு இரு தரப் பும் ஒப்புக் கொண்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தைக் கொண்டு போய்ச் சேர்க்கவே இந்தப் போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஐந்து வாரங்களாகக் கடுமையான சண்டை நடந்து வந்ததன் காரண மாக, ஏராளமான மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்துவெளியேறியிருக் கிறார்கள். அவர்களுக்கான நிவாரணம் வழங்குவதில் சிக்கல் இருந்து வந்தது.
பிரிட்டனின் வடக்கு அயர்லாந்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் சின் ஃபெய்ன் அமைப்பு அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அக்கட்சிக்கு 144 இடங்க ளும், ஜனநாயக கூட்டமைப்புக்கட்சிக்கு 122 இடங்களும் கிடைத் துள்ளன. 13 லட்சத்து 80 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட இந்தப் பகுதியில் முதன்முறையாக தனிப்பெரும் கட்சியாக சின் ஃபெய்ன் உருவாகியுள்ளது.
ஈக்குவடாரில் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தல் நடத்த ஜனாதிபதி கில்லர்மோ லஸ்ஸோ உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கான தேர்தலையும், யாசுனி தேசியப் பூங்காவில் எண்ணெய் எடுப்பது பற்றிய பிரச்சனையில் பொது வாக்கெடுப்பு நடத்துவதையும் ஒரே நாளில் வைத்துக் கொள்வது பற்றி தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. ஆகஸ்டு 29 ஆம் தேதி யன்று இதை நடத்தலாம் என்றும் திட்டமிட்டுள்ளார்கள்.